MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிரடியாக குறைந்த தக்காளி விலை...மகிழ்ச்சியில் பொதுமக்கள் -கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி என்ன விலை தெரியுமா.?

அதிரடியாக குறைந்த தக்காளி விலை...மகிழ்ச்சியில் பொதுமக்கள் -கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி என்ன விலை தெரியுமா.?

200 ரூபாய் என்ற உச்சத்தை தொட்ட தக்காளி விலை  தற்போது படிப்படியாக குறைந்து ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

2 Min read
Ajmal Khan
Published : Aug 21 2023, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அதிகரித்த தக்காளி விலை

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலை கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து வந்தது. ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக தக்காளி விலை உயர தொடங்கியது. முதலில் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 100, 150 என உயர்ந்து இறுதியாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக 200 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக தக்காளியை கிலோ கணக்கில் பொதுமக்கள் வாங்கி சென்ற நிலை மாறி எண்ணிக்கையில் வாங்கி சென்றனர். மேலும் வீடு மற்றும் ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி போன்ற உணவுவகைகள் சமைப்பதும் நிறுத்தப்பட்டது.

24

நியாயவிலைக்கடையில் தக்காளி

இந்தநிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி வாங்கவும் தமிழக அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 500 நியாயவிலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதும் பெரும்பாலான மக்களுக்கு தக்காளி குறைந்த விலையில் கிடைக்காத காரணத்தால் வெளி சந்தையில் தக்காளி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தக்காளி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அந்த வகையில் தக்காளிக்கு உரிய வகையில் வருவாய் கிடைக்காததால் மாற்று பயிருக்கு விவசாயிகள் மாறியது தான் விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.

34

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

மேலும் பருவம் தவறிய மழையும் தக்காளி உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1100 டன் தக்காளி வந்த நிலை மாறி வெறும் 300 டன் தக்காளி வந்ததால் தக்காளி விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது.  இந்தநிலையில் தக்காளி வரத்து கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்துள்ளது. இதனால் 200 ரூபாய் என்ற உச்சத்தில் இருந்த தக்காளி விலை படிப்படியாக குறைந்தது. கடந்த வாரம் ஒரு கிலோ 100 ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கடந்த 3 தினங்களாக 40 ரூபாய் என்ற விலையில் தொடர்ந்து நீடித்தது.

44

தக்காளி விலை குறைந்தது

இந்தநிலையில் இன்று தக்காளி வரத்து கோயம்பேடு சந்தைக்கு அதிகரித்ததால் ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கியும் செல்கின்றனர். அதே நேரத்தில் சில்லரை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாய் விரை விற்பனை செய்யப்படுகிறது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved