MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொத்தாக வரும் 9 நாள் தொடர் விடுமுறை.! குஷியில் பள்ளி மாணவர்கள்

கொத்தாக வரும் 9 நாள் தொடர் விடுமுறை.! குஷியில் பள்ளி மாணவர்கள்

School holiday schedule : தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை வருவதால், வெளியூர் செல்ல ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது, 

1 Min read
Ajmal Khan
Published : Sep 25 2025, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பள்ளி நாட்காட்டி
Image Credit : iSTOCK

பள்ளி நாட்காட்டி

விடுமுறை என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாட்டம் தான். அந்த வகையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை 2025-26 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பள்ளிகள் 210 நாட்கள் செயல்படும். 

அனைத்து சனி, ஞாயிறு நாட்களும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தாண்டு பள்ளியானது ஜூன் 5ஆம் தேதி திறக்கப்பட நிலையில், நடப்பு ஆண்டின் பள்ளி இறுதி நாட்களாக ஏப்ரல் 24 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

24
காலாண்டு தேர்வு முடிவு
Image Credit : Getty

காலாண்டு தேர்வு முடிவு

மேலும் பள்ளி நாட்காட்டியில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதியும், விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

 நாளையுடன் தேர்வு முடிவடையவுள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. அந்த வகையில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.

Related Articles

Related image1
நெல் கொள்முதல்... ஷாக்காகி நின்ற விவசாயிகள்.! குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
Related image2
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
34
நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : Getty

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

அதே நேரம் ஒரு சில தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை தேர்வானது 6 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. அந்த வகையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது.

44
தொடர்ந்து வரும் 9 நாள் விடுமுறை
Image Credit : our own

தொடர்ந்து வரும் 9 நாள் விடுமுறை

எனவே பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளதால் வெளியூர் செல்ல மற்றும் சுற்றுலாவிற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்கள். இதன் காரணமாக அனைத்து ரயில்களிலும் முன்பதிவு நிரம்பியுள்ளளது.

 மேலும் தனியார் பேருந்துகளிலும் கட்டணமானது பல மடங்கு அதிகரித்துள்ளது. எப்போதும் 800 முதல் 900 ரூபாய் வரை விற்பனையான டிக்கெட் விலை தற்போது 2000 ரூபாயை தொட்டுள்ளது. எனவே சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகுமா.? என பயணிகள் காத்துள்ளனர்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
பள்ளிகள் விடுமுறை
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved