- Home
- Tamil Nadu News
- நள்ளிரவில் நிர்வாணமாக வந்த நபர்! கதறிய 70 வயது சென்னம்மாள்! விடாத கொடூரன்கள்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
நள்ளிரவில் நிர்வாணமாக வந்த நபர்! கதறிய 70 வயது சென்னம்மாள்! விடாத கொடூரன்கள்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
Krishnagiri: ஊத்தங்கரையில் அடையாளம் தெரியாத நபர் 70 வயது சென்னம்மாளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி ஒபகாவலசை கிராமத்தில் கண்ணப்பன்(75). விவசாயி. இவரது மனைவி சென்னம்மாள் (70). இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் வெளியே கண்ணப்பன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ப நபர் நிர்வாணத்துடன் வந்துள்ளார். வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கண்ணப்பனை மர்ம நபர் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார்.
கணவரின் சத்தம் கேட்டு அவரது மனைவி சென்னம்மாள் கதவு திறந்து வெளியே வந்த போது அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைனக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் கண்ணப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக அவரது மனைவி சென்னம்மாள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த கண்ணப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து வயதான தம்பதியினரை தாக்கி கொலை செய்தது மட்டுமல்லாமல் பலாத்காரம் செய்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

