MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் விடுமுறை.! வெளியான அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாள் விடுமுறை.! வெளியான அறிவிப்பு

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஜூன் 3 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நல நீதிமன்றங்களுக்கும் மே 1 முதல் 15 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 Min read
Ajmal Khan
Published : Apr 24 2025, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

Tamilnadu family welfare courts summer holiday : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பகல் வேளைகளில் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை நீடிக்கிறது. மேலும் வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் இதனால் ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு முன் கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டது

23
Family welfare courts summer holiday

Family welfare courts summer holiday

கொளுத்தும் வெயில்- நீதிமன்றங்களுக்கு விடுமுறை

இதனை ஏற்று துவக்கப்பள்ளிகளுக்கு கடந்த வாரம் விடுமுறை விடப்பட்டது. இன்று 6ஆம் வகுப்பு முதல் மற்ற பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்ததையொட்டி ஜூன் 3ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

33
court closure

court closure

குடும்ப நல நீதிமன்றத்திற்கு விடுமுறை

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடை விடுமுறையொட்டி, வரும் மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் குடும்ப நல நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
சென்னை உயர் நீதிமன்றம்
விடுமுறை
நீதிமன்றம்
தமிழ்நாடு
கோடை விடுமுறை சிறப்பு ரயில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
Recommended image2
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
Recommended image3
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved