- Home
- Tamil Nadu News
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ரொம்ப முக்கிய அறிவிப்பு!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ரொம்ப முக்கிய அறிவிப்பு!
TN School Student: 2026-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6 தேதி நடைபெறவுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் 9 லட்சம் மாணவர்கள்
இந்த தேர்வுகளை 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 8.82 லட்சம் பள்ளி மாணவர்களும், 26,196 தனித்தேர்வர்களும் அடங்குவர். 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2026-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் வெளியீடு
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை நாளை பிற்பகல் முதல் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
பள்ளி தலைமையாசிரியர்கள்
இந்த விவரத்தினை முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார் பள்ளிகள்) புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) மற்றும் காரைக்காலில் முதன்மை கல்வி அலுவலர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களிடமும் தெரிவித்திடுமாறு கூறப்பட்டுள்ளது.

