MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருவண்ணாமலை
  • திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை..! உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை..! உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது. 

2 Min read
vinoth kumar
Published : Sep 03 2025, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Google

உலக புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் நினைத்தாலே முக்தி தரக்கூடிய புண்ணிய தலமாக விளங்கக்கூடியது. அது மட்டுமல்லாமல் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்குகிறது. இங்கு சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகம்.

25
Image Credit : our own

இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ஆனால் தற்போது தினமும் வெளியூர் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.

Related Articles

Related image1
1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! காலாண்டு தேர்வு எப்போது? எத்தனை நாள் விடுமுறை!
Related image2
திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட சில நொடிகளில்! அலறிய 180 பயணிகள்! நடந்தது என்ன?
35
Image Credit : our own

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாத பவுர்ணமி நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெற்றது.

45
Image Credit : our own

அதில், அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து எண்ணும் பணி சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது.

55
Image Credit : our own

இந்நிலையில், கோயில் உண்டியலில் ரூ.6 கோடியே 18 லட்சம் ரொக்கம், 275 கிராம் தங்கம், 2 கிலோ 700 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும் அந்த தொகையானது அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் வரலாற்றில் முதல்முறையாக உண்டியல் காணிக்கை ரூ.6 கோடியை கடந்து இருப்பது இதுதான் முதன்முறையாகும். திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதம் மாதம் உண்டியல் காணிக்கை அதிகரித்து வருகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருவண்ணாமலை
திருப்பதி
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved