MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • ஷாக்கிங் நியூஸ்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா?

ஷாக்கிங் நியூஸ்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.. என்ன காரணம் தெரியுமா?

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Jul 23 2023, 06:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள வேம்பு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (34). இன்ஜினியரிங் டிசைனர். இவரது மனைவி லக்ஷயா. குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து வந்தார். இவர்களுக்கு ரக்ஷிதா(10) என்ற மகள் உள்ளார். இவர்களுடன் ராஜேஷின் தாயார் பிரேமா(73) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக இவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. வீடும் வெளியே பூட்டவில்லை.

24

இந்நிலையில் நேற்று மாலை இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே வடவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. 

34

அப்போது ராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.  அவருக்கு அருகிலேயே லக்ஷயா, ரக்ஷிதா, பிரேமா ஆகியோர் விஷம் அருந்திய நிலையம் சடலமாக கிடந்தனர்.  இதனையடுத்து, அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

44

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved