MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • அடுத்த 3 மணிநேரம்! இந்த 13 மாவட்ட மக்களே உஷார்! வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

அடுத்த 3 மணிநேரம்! இந்த 13 மாவட்ட மக்களே உஷார்! வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இன்று 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min read
vinoth kumar
Published : Jul 26 2025, 12:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : ANI

தமிழகத்தில் கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அதேநேரத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பநிலையும் குறைந்து காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் வெயில் சதம் அடித்து வருகிறது.

24
Image Credit : ANI

இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
கோவையில் ஒரு குன்றத்தூர் அபிராமி..! கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது குழந்தை கொலை செய்த தாய்!
Related image2
குன்றத்தூர் அபிராமி வழக்கு! அதிகாலை 3.30 மணி வரை! நீதிபதியின் 200 பக்க தீர்ப்பில் இருப்பது என்ன?
34
Image Credit : ANI

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

44
Image Credit : ANI

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது பிற்பகல் 1 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved