MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • No Parking Board: இனி வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு! சென்னை காவல்துறை எச்சரிக்கை! மீறினால் இதுதான் கதி

No Parking Board: இனி வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு! சென்னை காவல்துறை எச்சரிக்கை! மீறினால் இதுதான் கதி

Chennai No Parking Board: சென்னையில் அனுமதியின்றி 'நோ பார்க்கிங்' போர்டுகள் வைப்பது சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை போக்குவரத்து காவல்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

2 Min read
vinoth kumar
Published : Sep 24 2024, 02:17 PM IST| Updated : Sep 24 2024, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சட்டத்திற்குப் புறம்பாக மாட்டப்படும் 'நோ பார்க்கிங்' போர்டுகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நந்தகுமார் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், மாம்பலம் உள்ளிட்ட பல இடங்களில்  அடுக்குமாடிக்குடியிருப்புகள் மற்றும் பங்களாக்களுக்கு முன்பாக சட்டத்திற்குப் புறம்பாக பொது இடங்களை ஆக்கிரமித்து 'நோ பார்க்கிங்' போர்டுகள், தடுப்புகளும் மற்றும் மணல் பைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் பொதுமக்களால் வாகனங்களை நிறுத்த முடிவதில்லை.

இதையும் படிங்க: Durai Dayanidhi: முதல்வர் ஸ்டாலினுக்கு போன தகவல்! 294 நாட்களுக்கு பிறகு துரை தயாநிதி! வைரலாகும் போட்டோ!

26

இந்த பலகைகள் சட்டத்திற்குப் புறம்பானதாக இருந்தாலும், இவற்றை காவல்துறையின் உதவியுடன் தான் கட்டட உரிமையாளர்கள் வைப்பதாக கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டத்திற்குப் புறம்பாக, முன் அனுமதியின்றி 'நோ பார்க்கிங்' போர்டுகள், தடுப்புகள் வைத்திருப்போர் மீது சட்டரீதியாக காவல்துறை நடவடிக்கை வேண்டும் உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து நோ பார்க்கிங் பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது என்று பொதுமக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

36

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP), குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் "நோ பார்க்கிங்" சைன்போர்டுகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளது மற்றும் முறையான அங்கீகாரம் இல்லாமல் பொது சாலைகளில் மற்ற தடைகள். இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுகிறது.

இதையும் படிங்க:  Government School Holiday: காலாண்டுத் தேர்வு விடுமுறை அதிகரிப்பு? வெளியாகப் போகும் அறிவிப்பு?

46

சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி "நோ பார்க்கிங்" பலகைகள், தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது. மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 116ன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

56

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்:

அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். விதிமீருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அங்கீகரிக்கப்படாத இடங்களில் "நோ பார்க்கிங் பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், சரக போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும்.

66

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP), விதிமீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க நகரம் முழுவதும் வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளும். இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதற்கும் மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்கும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை உயர் நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved