MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை
  • சென்னை விமான நிலையத்தில் அலறிய பயணிகள்! 161 பேர் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்!

சென்னை விமான நிலையத்தில் அலறிய பயணிகள்! 161 பேர் உயிர் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் டயர் ஓடுபாதையில் வெடித்ததால் பயணிகள் பீதியடைந்தனர். 

1 Min read
vinoth kumar
Published : Apr 27 2025, 11:14 AM IST| Updated : Apr 27 2025, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Chennai Airport

Chennai Airport

Chennai Airport Flight Tyre Burst: தமிழகத்தில் பல்வேறு விமான நிலையங்கள் இருந்தாலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் விமான நிலையம் சென்னை விமான நிலையம். இங்கு இருந்து பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 158 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 166 பேருடன்  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மும்பை புறப்பட்டது. 

இதையும் படிங்க: தப்பி தவறி கூட வெளியே போயிடாதீங்க! 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரப்போகுதாம்! வானிலை ஷாக் தகவல்!

23
indigo airlines

indigo airlines

இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் டயர் வெடித்தது

அப்போது, ஓடுதளத்தில் வேகமாக சென்றுக்கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், நிலைத்தடுமாறிய விமானம் ஓடுபாதையில் குலுங்கியபடி தாறுமாறாக ஓடியதால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். உடனே சாதுரியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை உடனடியாக ஓடுபாதை நிறுத்தியதால் பெரும் உயிர் தவிர்க்கப்பட்டது. 

இதையும் படிங்க:  இந்த 3 பிரபல ரவுடிகள் தலைநகர் சென்னைக்குள் நுழைய தடை! யாரெல்லாம் தெரியுமா?

33
Plane Tyre burst

Plane Tyre burst

விமானியால் உயிர் தப்பிய 161 பேர் 

இதையடுத்து, விமானத்தின் நிலை குறித்து உடனே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு விமானம் இழுத்துச் செல்லப்பட்டது. பின்னர், பயணிகள் யாரையும் இறக்கிவிடாமல் வெடித்த டயர் மாற்றப்பட்டு இரண்டரை மணிநேரம் தாமதமாக விமானம் மும்பைக்கு புறப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை விமான நிலையம்
விபத்து
வானூர்திப் பயணங்கள்
இண்டிகோ விமானம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved