MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • IPL 2025: ஐபிஎல்லில் 'இது' தேவையில்லாத ஆணி! உண்மையை போட்டுடைத்த தோனி!

IPL 2025: ஐபிஎல்லில் 'இது' தேவையில்லாத ஆணி! உண்மையை போட்டுடைத்த தோனி!

சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல்லில் கடைபிடிக்கப்படும் இம்பேக்ட் பிளேயேர் விதி குறித்து விரிவாக பேசியுள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 25 2025, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

IPL: MS Dhoni talks about Impact Player Rule: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது போட்டியில் பலம்வாய்ந்த மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் சொந்த மண்ணில் வரும் 28ம் தேதி ஆர்சிபியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
MS Dhoni, IPL, CSK

MS Dhoni, IPL, CSK

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாருக்கு தோனி அளித்த பேட்டியில் கூறுகையில், ''இம்பேக்ட் விதி செயல்படுத்தப்பட்டபோது, ​​அந்த நேரத்தில் அது உண்மையில் தேவையில்லை என்று உணர்ந்தேன். ஆனால் ஒரு வகையில் இது எனக்கு உதவுகிறது. ஆனால் அதே நேரத்தில் நான் இன்னும் விக்கெட் கீப்பிங் ப‌ணியைத் தான் செய்கிறேன். அதனால் நான் ஒரு இம்பேக்ட் பிளேயர் அல்ல'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தோனி, ''இம்பேக்ட் பிளேயர் விதி அதிக ஸ்கோரிங்களுக்கு வழிவகுப்பதாக பலரும் கூறுகிறார்கள். நிலைமைகள் மற்றும் வீரர்களின் ஆறுதல் நிலை காரணமாக இது அதிகம் என்று நான் நம்புகிறேன். அடிக்கப்படும் ரன்களின் எண்ணிக்கை ஒரு கூடுதல் பேட்ஸ்மேனால் மட்டுமல்ல. இது மனநிலையைப் பற்றியது, அணிகள் இப்போது ஒரு கூடுதல் பேட்டர் ஆறுதலைக் கொண்டுள்ளன, எனவே அவர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள்'' என்றார்.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ கொடுக்கும் இன்ப அதிர்ச்சி! ரோகித், கோலிக்கு வரப்போகும் ஷாக்?

34
IPL Impact Player Rule, Cricket

IPL Impact Player Rule, Cricket

இம்பேக்ட் பிளேயர் விதி என்றால் என்ன?

ஐபிஎல் போட்டிகளில்'இம்பாக்ட் பிளேயர்' என்ற விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிரிக்கெட் அணியில் பிளேயிங் லெவன் எனப்படும் 11 பேர் கொண்ட வீரர்கள் விளையாடுவார்கள். இது தான் விதி. ஆனால் இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வழக்கமான ஆடும் லெவனில் உள்ள 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை டாஸ் போடும்போது அந்தந்த அணிகள் அறிவிக்க வேண்டும். இந்த 5 வீரர்களில் யாராவது ஒருவரை தேவைக்கு ஏற்றார்போல் அணியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

44
Rohit Sharma and Virat Kohli

Rohit Sharma and Virat Kohli

அதாவது இந்த 5 வீரர்களில் ஒருவரை ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்ஸ்மேனாகவோ அல்லது பேட்ஸ்மேனுக்கு பதிலாக பவுலராக பயன்படுத்திக் கொள்ளலாம். இம்பாக்ட் பிளேயர் விதியால் ஐபிஎல் அணிகளுக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு பவுலர் கிடைப்பார்கள். கடந்த 2023ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

IPL: மீண்டும் வேலையை காட்டும் சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பண்ட், லக்னோ வீரர்கள் அதிருப்தி?

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எம். எஸ். தோனி
ஐபிஎல்
ஐபிஎல் 2025
சிஎஸ்கே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: ஒவ்வொரு அடியும் இடி மாதிரி.. சிக்சர் மழை பொழிந்து சாதனை படைத்த வைபவ்..
Recommended image2
Virat Kohli: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை..! அலெக்ஸ் ஹேல்ஸை சமன் செய்த கிங் கோலி..!
Recommended image3
PBKS vs RCB: முதல் அணியாக பிளேஆஃப்க்குள் கெத்தாக நுழைந்தது ஆர்சிபி! பஞ்சாப் பரிதாபம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved