ராணுவத்துக்கு ஐபிஎல் அணிகள் பாராட்டு! சிஎஸ்கே சொன்னது தான் இதில் ஹைலைட்!
ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட பல அணிகள் இந்திய ராணுவத்தின் துணிச்சலையும் வீரத்தையும் பாராட்டியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
IPL Teams Salute Indian Army: இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் வலுவடைந்து வரும் நிலையில், தாய் நாட்டை காக்க நமது ராணுவ வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வருகின்றனர். இந்த போர் காரணமாக ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு வாரத்த்துக்கு ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நமது இந்திய ராணுவத்தின் துணிச்சலையும் வீரத்தையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணிகள் பாராட்டியுள்ளன.
இந்திய ராணுவத்துக்கு சிஎஸ்கே, ஆர்சிபி பாராட்டு
RCB தங்கள் X தளத்தில், "இந்த தேசிய நெருக்கடியான நேரத்தில், நமது இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலையும் வீரத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் இந்தியாவில் உள்ள அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திக்கிறோம். ஜெய்ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தளத்தில், "ஒவ்வொரு அடியிலும் துணிச்சல். ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் பெருமை. நமது ஆயுதப்படைகளைப் பாராட்டுகிறோம். நாடு தான் முதலில் மற்றதெல்லாம் அதன் பிறகு தான்" என்று பதிவிட்டுள்ளது.
ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து
இதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ''நாடு தான் முதலில் முக்கியம். இந்திய ராணுவத்துக்கு சல்யூட். ஜெய்ஹிந்த்'' என்று தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ''எப்போதும் நாடு தான் பர்ஸ்ட். நேற்று, இன்று, நாளை என எப்போதும் நமது ராணுவத்துடன் துணை நிற்போம்''என்று கூறியுள்ளது. போர் பதற்றம் அதிகரித்ததால் ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐபிஎல் நிர்வாகம் ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகளை நடத்துவது குறித்து ஒரு வாரத்துக்கு பிறகு கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி ரத்து
ஐபிஎல் தொடரில் இதுவரை 58 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் போட்டிகள், இறுதிப்போட்டி நடைபெற இருந்தது. ஐபிஎல் தொடரில் நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டி நடந்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களை தாக்கிய நிலையில், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களும், வீரர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.