MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • சாம்பியன்ஸ் டிராபியில் பரிசு மழை; அடேங்கப்பா! முதல் பரிசு இத்தனை கோடியா?

சாம்பியன்ஸ் டிராபியில் பரிசு மழை; அடேங்கப்பா! முதல் பரிசு இத்தனை கோடியா?

எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி மீண்டும் நடத்தப்படுகிறது. கடைசியாக 2017ல் நடந்தது. 1998ல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டது. 2009 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது. 

2 Min read
Author : Rayar r
Published : Feb 14 2025, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சாம்பியன்ஸ் டிராபியில் பரிசு மழை; அடேங்கப்பா! முதல் பரிசு இத்தனை கோடியா?

சாம்பியன்ஸ் டிராபியில் பரிசு மழை; அடேங்கப்பா! முதல் பரிசு இத்தனை கோடியா?

மினி உலகக்கோப்பை என்று அழைக்கபடும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி முதல் நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் பரிசுத் தொகையை 53% அதிகரித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வெல்லும் அணி 2.24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20 கோடி) பரிசை அள்ளும். 

இரண்டாம் இடம் பிடிக்கும் அணி 1.12 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 9.72 கோடி) பெறும். அரையிறுதியில் தோற்கும் அணிகள் தலா 560,000 அமெரிக்க டாலர்களை (ரூ. 4.86 கோடி) பெறுவார்கள். சாம்பியன்ஸ் டிராபியின் மொத்த பரிசுத் தொகை இப்போது 6.9 மில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ. 60 கோடி) உயர்ந்துள்ளது.

24
சாம்பியன்ஸ் டிராபி 2025

சாம்பியன்ஸ் டிராபி 2025

சாம்பின்ஸ் டிராபி லீக் ஆட்டத்தில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 34,000 டாலர்கள் (ரூ.30 லட்சம்) கிடைக்கும். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் தலா 3,50,000 டாலர்களை (சுமார் ரூ.3 கோடி) பெறும். 

ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் 1,40,000 டாலர்களை (சுமார் ரூ.1.2 கோடி) பெறுவார்கள். பங்கேற்கும் எட்டு அணிகளுக்கும் போட்டியில் பங்கேற்றதற்காக குறைந்தபட்சம் 1,25,000 டாலர்கள் (ரூ.1.08 கோடி) கிடைக்கும். 

"கணிசமான பரிசுத் தொகை விளையாட்டில் முதலீடு செய்வதற்கும் எங்கள் நிகழ்வுகளின் உலகளாவிய கௌரவத்தைப் பேணுவதற்கும் ஐசிசியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது," என்று ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி பிப்.19ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் யார் மோதல்? இந்தியா‍-பாக். மேட்ச் எப்போது?

 

 

34
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி

1996க்குப் பிறகு பாகிஸ்தான் முதல் முறையாக ஐசிசி போட்டியை நடத்துகிறது. இருப்பினும் பாதுகாப்புக் காரணங்களால், இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது. இதனால் இந்தியா அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும். இந்திய அணி தனது முதல் போட்டியை பிப்ரவரி 20 அன்று வங்காளதேசத்திற்கு எதிராக விளையாட உள்ளது. 

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறும்.இரண்டு பிரிக்கப்பட்ட எட்டு அணிகள் இடம்பெறும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

44
சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகை

சாம்பியன்ஸ் டிராபி பரிசுத்தொகை

ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2009 முதல் 2017 வரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றது, பின்னர் கொரொனா தொற்று இடையூறுகள் மற்றும் பல்வேறு காரணங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் நடக்கிறது. 

சாம்பியன்ஸ் டிராபி 1998ல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் பெண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2027ம் ஆண்டு டி20 பார்மட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் மனைவிகளுடன் செல்ல தடை? பிசிசிஐ அதிரடி!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
Recommended image2
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?
Recommended image3
ஹர்திக், அபிஷேக், திலக் ருத்ரதாண்டவம்.. தெறிக்க விட்ட இந்தியா.. 4 ரன்னில் உலக சாதனை மிஸ்ஸிங்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved