பாகிஸ்தான் கூட வேர்ல்ட் கப் மேட்ச் முன்னாடி மொத்த ஊரும் என்னை அசிங்கப்படுத்துச்சு அழுக வந்துருச்சு:வி.ஷங்கர்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன விஜய் சங்கர் 2019 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து தற்போது தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
சங்கர் நாங்கள் வீரர்களில் ஒரு சிலர் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு காபி ஷாப்பிற்கு சென்றோம். அதாவது அடுத்த நாள் பாகிஸ்தான் எதிரான போட்டிக்கு முன்னர் நாங்கள் அங்கு சென்ற போது பாகிஸ்தான் ரசிகர்களில் ஒரு சிலர் எங்களிடம் வந்து அத்துமீறி வார்த்தைகளை விட்டுக்கொண்டிருந்தார்கள்.
தொடர்ந்து அவர்கள் வசைபாடிய பிறகு தான் எனக்கு புரிந்தது இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் எந்த அளவு தீவிரமாக இருக்கும் என்று அந்த அளவிற்கு பாகிஸ்தானை ஆதரிக்கும் ரசிகர்கள் எங்களை வெறுத்து வசை பாடிக் கொண்டிருந்தனர்
ஆனால் நாங்கள் பதில் எதுவும் சொல்லாமல் அவர்களுடைய அனைத்து வார்த்தைகளையும் ஏற்றுக்கொண்டோம்.
அவர்கள் எங்களை கண்டபடி ஏசினார்கள் அனைத்தையும் நாங்கள் பொறுமையாக கேட்டுக்கொண்டு என்னதான் செய்கிறார்கள் என்று பேசாமல் கவனித்தோம். அந்த ஒரு நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது
அதற்கடுத்த நாள் நான் அணியில் விளையாட போகிறேன் அதுவும் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் அதற்கு பதில் என்னை களம் இறக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும் ஆயத்தம் ஆனேன் என்று விஜய் சங்கர் கூறியுள்ளார்.