என்ன பத்தி பேசுனா பிரச்னை இல்ல நாட்டை தப்பா பேசுனாரு அந்த கோபத்துல நெல் உடன் நடந்த சம்பவம் பகிர்ந்த ஸ்ரீசாந்த்
2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நடைபெற்ற சூதாட்ட பிரச்சனை காரணமாக கிரிக்கெட் போட்டியிலிருந்து வாழ்நாள் தடை செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் மீண்டும் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது . இதன்மூலம் அவர் மீண்டும் களமிறங்கும் உத்வேகத்துடன் உழைத்து வருகிறார்
ஸ்ரீசாந்த் 2007 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க தொடரில் ஆண்ட்ரே நெல் உடனான மோதல் குறித்த சில சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.
அந்தத் தொடரின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வீரரான ஸ்ரீசாந்தை நோக்கி ஆண்ட்ரே நெல் பந்துவீசிவிட்டு ரொம்ப மோசமாக பேசிவிட்டு சென்றார். இதனால் கோபமடைந்த ஸ்ரீசாந்த் அடுத்த பந்தை சிக்சருக்கு அடித்துவிட்டு பேட்டை தலையை சுற்றி ஒரு டான்ஸ் ஆடினார்
இது குறித்து பேசிய ஸ்ரீசாந்த் கூறுகையில் அவருடைய பந்தை நான் சிக்ஸர் அடித்ததும் நிறைய பேர் சிரித்து இருப்பார்கள் என்பது எனக்கே தெரியும் ஆனால் என்னையும் எனது நாட்டையும் பற்றி அவர் தவறாக பேசினார் அது யாருக்கும் தெரியாது
எனவே அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் மேலும் அவரை அடக்க வேண்டும் என்று நினைத்து தான் அந்த சிக்ஸரை அடித்தேன்
சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடை பெற்று அவர் மீண்டும் தற்போது விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது