#AUSvsIND அவரு உண்மையான சாம்பியன்.. இந்திய வீரருக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்
First Published Jan 3, 2021, 10:13 PM IST
இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா சாம்பியன் பவுலர் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் வரும் 7ம் தேதி தொடங்குகிறது.

2வது போட்டியில் இந்திய அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ஷமி ஆகிய இருவரும் இல்லாமலேயே ரஹானே தலைமையிலான இந்திய அணி அபாரமாக ஆடி ஆஸி., அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதற்கு இந்திய அணியின் பவுலிங் யூனிட் தான் முக்கிய காரணம். இந்திய அணியின் பவுலிங் தற்போது சிறப்பாக உள்ளதால் தான் ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்த முடிகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?