பழசை மறக்காத தமிழர்களின் அடையாளம் நடராஜன்..!
First Published Dec 11, 2020, 9:18 PM IST
யார்க்கர் மன்னன் நடராஜன், தனது பவுலிங்கால் மட்டுமல்லாது பழையதை மறக்காத தனது பண்புகளாலும் சர்வதேச அளவில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்தில், சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைக்குடும்பத்தில் பிறந்து, தனது திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, டி.என்.பி.எல், ஐபிஎல் என படிப்படியாக வளர்ந்து, இன்றைக்கு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே அலறவிடும் அளவுக்கு உயர்ந்துள்ளார், இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது துல்லியமான யார்க்கர்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதன்மூலம் ஐபிஎல்லில் வாய்ப்பை பெற்றார் நடராஜன். 2017ம் ஆண்டு ஐபிஎல்லிலேயே அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் எடுத்தார் சேவாக். ஆனால் காயத்தால் அந்த சீசனில் முழுமையாக ஆடமுடியாத நடராஜன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடியபோது, தனது துல்லியமான யார்க்கர்கள் மற்றும் கட்டர்கள் மூலம் டெத் ஓவர்களில் அருமையாக வீசி, முன்னாள், இந்நாள் ஜாம்பவான்கள் அனைவரின் பாராட்டுகளையும் குவித்தார் நடராஜன். அதன் விளைவாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான வலைப்பயிற்சி பவுலராக எடுக்கப்பட்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?