- Home
- Sports
- Sports Cricket
- MS Dhoni: மீண்டும் இந்திய அணிக்கு வரும் தோனி?.. உங்கள விட்டா வேறு ஆள் இல்ல.. பிசிசிஐ வேண்டுகோள்!
MS Dhoni: மீண்டும் இந்திய அணிக்கு வரும் தோனி?.. உங்கள விட்டா வேறு ஆள் இல்ல.. பிசிசிஐ வேண்டுகோள்!
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக பொறுப்பேற்க தோனியுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

BCCI Wants MS Dhoni as Mentor for 2026 T20 World Cup
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் 'தல' என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, தனது அசைக்க முடியாத தலைமைத்துவத்தாலும், அமைதியான மனோபாவத்தாலும் உலக அளவில் புகழ் பெற்றவர். 2007ல் இந்தியாவை முதல் டி20 உலகக் கோப்பையை வெல்ல வைத்த தோனி, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராஃபியை வென்று இந்தியாவை உலக அரங்கில் திரும்பி பார்க்க வைத்தார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், IPLயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
தோனியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ
2026ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள நிலையில், உலகக்கோப்பைக்காக தோனியை இந்திய அணியின் ஆலோசராக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தி, அழுத்த நிலைகளில் கட்டுப்பாடு மற்றும் பெரிய போட்டிகளின் அனுபவம், இளம் அணியை வழிநடத்த உதவும் என்று BCCI நம்புகிறது. இதற்காக தோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
2021 டி20 உலகக் கோப்பையில் தோனி ஆலோசகர்
ஆசியக் கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தோனிக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. ஆனால் இதை தோனி ஏற்பாரா? என்பது தெரியவில்லை. இந்திய அணியில் தோனியின் மெண்டர் பயணம், 2021 டி20 உலகக் கோப்பையுடன் தொடங்கியது. ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, BCCI அவரை இந்திய அணிக்கு வழிகாட்டியாக அழைத்தது. அப்போது விராட் கோலி கேப்டனாகவும், ரவி சாஸ்திரி பயிற்சியாளராகவும் இருந்தனர்.
இந்திய அணி படுதோல்வி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் தோனி அணியின் உள் அறையில் ஆலோசனைகளை வழங்கி, வீரர்களின் மனநிலையை உயர்த்தினார். இருப்பினும் அந்த தொடரில் இந்திய அணி படுமோசமாக விளையாடி குரூப் ஸ்டேஜிலிருந்து வெளியேறியது அதிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. இது தோனிக்கு ஒரு கசப்பான அனுபவமாக இருந்தாலும் அவரது அறிவுரைகளை இந்திய வீரர்கள் பாராட்டியிருந்தனர்.
கவுதம் கம்பீர் ஏற்பாரா?
இப்போது தோனி பிசிசிஐயின் வேண்டுகோளை ஏற்றாலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அதை ஏற்றுக் கொள்வாரா? என்பது தெரியவில்லை. ஏனெனில் அவர்களின் கடந்த கால உறவு சில சர்ச்சைகளுடன் கூடியது. 2011 உலகக் கோப்பை இறுதியில், கம்பீர்-தோனி ஜோடி வெற்றிக்கு வழிவகுத்தாலும், சில முடிவுகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.
90 ரன்கள் அடித்திருந்தாலும் தன்னை விட தோனியை தான் அதிகம் பேசுகின்றனர் என்று கம்பீர் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் பழைய கதையை மறந்து விட்டு இப்போது அணியின் நலனுக்காக இருவரும் ஒன்றிணைவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.