உனக்கு அறிவு இருக்கா? தத்தி மாதிரி ஆடி சான்ஸை வேஸ்ட் பண்ணுற இனி இந்திய அணி வாய்ப்பு கஷ்டம் சஞ்சு சாம்சன்
இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும் போது சஞ்சு சாம்சன் இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் என்று பலரும் பல விமர்சனங்களை முன் வைக்கின்றனர் வல்லுநர்கள் பலர் இவருக்கு அறிவு உள்ளதா,தத்தி மாதிரி வெளையாடுற என்றும் கூட கேட்டு உள்ளனர். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த தொடர் நடந்து முடிந்துள்ளது.
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக கஷ்டப்பட்ட சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு முன் சில போட்டிகளில் ஆடி இருந்தாலும் இந்த தொடரில் இந்த தொடரில் இவர் மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது இருப்பினும் சரியாக ஆடவில்லை.
ஐபிஎல் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து இந்திய அணியிலும் இந்த முறை வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் இந்திய அணியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் சரியாக ஆடவில்லை. ஷ்ரேயஸ் ஐயருக்கும் முன்பாக இவரை களமிறக்கி கோலி இவருக்கு வாய்ப்புகளை வழங்கினார்.
இவருக்கு இவ்வளவு சிறப்பான வாய்ப்புகள் வழங்கப்பட்ட பின்பும் கூட சஞ்சு சாம்சன் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மூன்று டி 20 போட்டிகளிலும் இவர் 20 ரன்களை கூட தாண்டவில்லை
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இவர் பல மாதங்கள் புலம்பி இருக்கிறார். கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் இவருக்காக இணையத்தில் புலம்பி உள்ளனர். ஆனால் இப்போது வாய்ப்பு கிடைத்தும் அவர் அதை சரியாக பயன்படுத்தவில்லை
இவர் ஆடும் 4வது இடத்தில் களமிறங்க இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, பண்ட் என்று பல வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் தற்போது சஞ்சு சாம்சன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். சரியாக ஆடவில்லை என்றால் கிரிக்கெட் கெரியரே காலியாகிவிடும் சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் இருக்கிறார்.