MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ரிஷப் பண்ட் திரும்ப வருவது முக்கியம்: மகாகாலேஸ்வரர் கோயிலில் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்த இந்திய வீரர்கள்

ரிஷப் பண்ட் திரும்ப வருவது முக்கியம்: மகாகாலேஸ்வரர் கோயிலில் வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்த இந்திய வீரர்கள்

ரிஷப் பண்ட் திரும்ப வருவது என்பது எங்களுக்கு முக்கியமானது என்று இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

2 Min read
Rsiva kumar
Published : Jan 23 2023, 10:00 AM IST| Updated : Jan 23 2023, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
நியூசிலாந்து

நியூசிலாந்து

இந்தியா வந்துள்ளா நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது.

210
இந்தியா - ஹைதராபாத் ஒரு நாள் போட்டி

இந்தியா - ஹைதராபாத் ஒரு நாள் போட்டி

முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்து முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

310
இந்தியா - ராய்ப்பூர் 2ஆவது ஒரு நாள் போட்டி

இந்தியா - ராய்ப்பூர் 2ஆவது ஒரு நாள் போட்டி

இதைத் தொடர்ந்து ராய்ப்பூரில் நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது. 

410
இந்தூர் - 3ஆவது ஒரு நாள் போட்டி

இந்தூர் - 3ஆவது ஒரு நாள் போட்டி

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இந்தூர் வந்துள்ளனர்.

510
உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில்

உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில்

இந்தூர் வந்த இந்திய அணி வீரர்கள் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன் பிறகு ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் சூர்யகுமார் யாதவ் கூறியிருப்பதாவது: நாங்கள் ரிஷப் பண்டிற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்தோம். அவர் திரும்ப வருவது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

610
ரிஷப் பண்ட் கார் விபத்து

ரிஷப் பண்ட் கார் விபத்து

கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 
 

710
கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை

கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை

அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, எலும்பியல் மருத்துவரான டின்ஷாவின் மேற்பார்வையின் கீழ் ரிஷப் பண்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
 

810
தசைநார்கள்

தசைநார்கள்

தசைநார்கள் அதிகளவில் காயம் அடைந்திருந்தன. கவலைக்கு இதுவே அதிக காரணமாகவும் இருந்தது. தற்போது தசைநார்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

910
வீடு திரும்பும் ரிஷப் பண்ட்

வீடு திரும்பும் ரிஷப் பண்ட்

அதோடு, இன்னும் 2 வாரங்களில் அவர் வீடு திரும்புவார். பொதுவாக தசைநார்கள் 4 முதல் 6 மாதங்களில் குணமாகும். இன்னும் 2 மாதங்களில் அவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். 

1010
மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

அதுமட்டுமின்றி அவ்வப்போது மருத்துவரின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரையிலும் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
குல்தீப் யாதவ்
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved