MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்து வந்த டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் – பண்ட், ஷமி இருக்காங்க!

மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்து வந்த டாப் 5 கிரிக்கெட் வீரர்கள் – பண்ட், ஷமி இருக்காங்க!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் 2022 இல் ஒரு பயங்கர விபத்தில் சிக்கினார். சாவின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பினார். இதே போன்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் கார் விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். 

2 Min read
Author : Rsiva kumar
Published : Aug 20 2024, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Rishabh Pant, Mohammed Shami, Nicholas Pooran

Rishabh Pant, Mohammed Shami, Nicholas Pooran

ரிஷப் பண்ட், ஷமி, நிக்கோலஸ் பூரன்

உலக கிரிக்கெட்டில் சாவை மிக அருகில் பார்த்த கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர். மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பினர். இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையென்றால் எதுவும் நடந்திருக்கலாம். இந்த பயங்கர விபத்துகளில் இருந்து தப்பி இப்போது உலக கிரிக்கெட்டை ஆண்டு வருகின்றனர். அதனால் இவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட டாப்-5 வீரர்களைப் பார்த்தால் இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகமது ஷமி, ரிஷப் பண்ட் மற்றும் கருண் நாயர் என்ற மூன்று நட்சத்திரங்கள் உள்ளனர். அந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்களைப் பற்றிய விவரங்கள் இதோ..

 

 

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Mohammed Shami

Mohammed Shami

1. முகமது ஷமி (இந்தியா)

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2018ல் டேராடூனில் இருந்து புதுடெல்லிக்கு காரில் வந்து கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில், ஷமியின் தலையில் வலது கண்ணுக்கு மேல் காயம் ஏற்பட்டது. அதன் மீது சில வெட்டுக்களும் ஏற்பட்டன. விபத்து நடந்தபோது ஷமிக்கும் அவரது மனைவி ஹசின் ஜஹானுக்கும் இடையே தகராறு நடந்தது. இருப்பினும், விபத்தில் இருந்து மீண்ட ஷமி கிரிக்கெட் மைதானத்தில் அற்புதமாக மீண்டு வந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

36
Karun Nair

Karun Nair

2. கருண் நாயர் (இந்தியா)

இந்திய அணி வீரர் கருண் நாயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதங்களை விளாசிய பெருமைக்குரியவர். வீரேந்திர சேவாக்கிற்குப் பிறகு, நாயர் 2016 இல் சென்னையில் விளையாடும் போது 3 சதங்களை விளாசினார். அதே ஆண்டு கருண் நாயர் விபத்தில் சிக்கினார். 2016 ஜூலையில், அவர் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனது உறவினர்களுடன் பம்பா நதியைக் கடந்து படகில் ஒரு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, படகு விபத்துக்குள்ளானது. இருப்பினும், அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்றினர். அந்த விபத்தில் கருண் நாயர் தனது உறவினர்களை இழந்தார். அதிர்ஷ்டவசமாக அந்த விபத்திலிருந்து கருண் நாயர் உயிர் பிழைத்து வந்தார்.

46
Oshane Thomas

Oshane Thomas

3. ஒசேன் தாமஸ் (வெஸ்ட் இண்டீஸ்)

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒசேன் தாமஸ் பிப்ரவரி 2020 இல் ஜமைக்காவில் ஒரு பெரிய விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் தாமஸ் பயணம் செய்த கார் முற்றிலுமாக கவிழ்ந்தது, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் ஒசேன் தாமஸ் வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, தாமஸ் விரைவில் குணமடைந்து கிரிக்கெட் மைதானத்திற்கு திரும்பினார்.

56
Nicholas Pooran

Nicholas Pooran

4. நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்)

நிக்கோலஸ் பூரன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் என்று கருதப்படுகிறார். ஜனவரி 2015ல், நிக்கோலஸ் பூரன் ஒரு பயங்கர விபத்தில் சிக்கினார். நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். டிரினிடாடில் நடந்த சாலை விபத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் உயிர் தப்பினார். அவரது இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. நிக்கோலஸ் பூரன் பல மாதங்கள் சக்கர நாற்காலியில் இருந்தார். பின்னர் குணமடைந்து கிரிக்கெட் மைதானத்திற்கு திரும்பினார். 

66
Rishabh Pant

Rishabh Pant

5. ரிஷப் பண்ட் (இந்தியா)

டிசம்பர் 30, 2022 அன்று அதிகாலை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பயணம் செய்த BMW கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த பயங்கர விபத்தில் பண்ட் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்திய அணிக்கு மீண்டும் வருவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆனது. விபத்தில் ரிஷப் பண்டின் தலை, முதுகு, கால்களில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், விடாமுயற்சியுடன் முயற்சி செய்து, குணமடைந்த பிறகு ஐபிஎல் தொடரின் மூலம் மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருடன் இந்திய அணிக்கு திரும்பினார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
இந்தியா
ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
அடிச்சிக்க போறது பெங்களூரு - பஞ்சாப்.. ஆனா ஹார்ட் பீட் எகிறப்போறது சென்னைக்கு! என்னப்பா கணக்கு இது?
Recommended image2
KKR vs GT: 22 சிக்ஸர்கள், 12 ஃபோர்கள்! ஈடன் கார்டன்ஸில் GTஐ பொட்டலம் கட்டிய KKR
Recommended image3
IPL 2026: கடைசி நேரத்தில் உயிர்த்தெழுந்த KKR.. ஆலன், ரகுவன்ஷி தெறி பேட்டிங்.. GT-க்கு 247 ரன்கள் இலக்கு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved