MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சூர்யகுமார் யாதவ்வுக்கு 30% அபராதம் விதித்த ஐசிசி! ஹாரிஸ் ராஃப் மீதும் கடும் நடவடிக்கை! என்ன காரணம்?

சூர்யகுமார் யாதவ்வுக்கு 30% அபராதம் விதித்த ஐசிசி! ஹாரிஸ் ராஃப் மீதும் கடும் நடவடிக்கை! என்ன காரணம்?

விதிமுறைகளை மீறியதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வுக்கு ஐசிசி 30% அபராதம் விதித்துள்ளது. இதேபோல் கேவலமான செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப்புக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Sep 26 2025, 08:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025
Image Credit : Getty

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பஹல்காம் குறித்து பேசியதற்காக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஐசிசி அவருக்கு 30% அபராதம் விதித்துள்ளது.

லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.

24
சூர்யகுமார், ஹாரிஸ் ராஃப்புக்கு அபராதம்
Image Credit : Asianet News

சூர்யகுமார், ஹாரிஸ் ராஃப்புக்கு அபராதம்

இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது. அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில், இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் 'தகாத வார்த்தைகளை' பயன்படுத்தியதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு எச்சரிக்கை

அதே வேளையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ஃபர்ஹான் மற்றும் ராஃப்பின் செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

Related Articles

Related image1
ஆசிய கோப்பை! வங்கதேசம் போராடி தோல்வி! இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதல்! கோப்பை யாருக்கு?
Related image2
ஆசிய கோப்பை! பைனல்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு இப்படி ஒரு மோசமான ரிக்கார்டா! அச்சச்சோ!
34
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்
Image Credit : ANI

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்

முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த பிறகு ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் ராஃப், அபிஷேக் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

'ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது செய்கைக்காக அல்ல. சாஹிப்சாதா ஐசிசியிடம் இருந்து எச்சரிக்கை பெற்றுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

44
ஹாரிஸ் ராஃப்பின் கேவலமான செயல்
Image Credit : X

ஹாரிஸ் ராஃப்பின் கேவலமான செயல்

மேலும் ஹாரிஸ் ராஃப் தனது விரல்களை உயர்த்தி 0 6 என்று காட்டினார். இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது ஆறு இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற கூற்றுகளைக் குறிப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆசியக் கோப்பை
ஆசிய கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?
Recommended image2
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Recommended image3
வென்றால் மட்டுமே வாய்ப்பு! ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா? IND vs ZIM மேட்ச் அப்டேட்ஸ்!
Related Stories
Recommended image1
ஆசிய கோப்பை! வங்கதேசம் போராடி தோல்வி! இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதல்! கோப்பை யாருக்கு?
Recommended image2
ஆசிய கோப்பை! பைனல்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுக்கு இப்படி ஒரு மோசமான ரிக்கார்டா! அச்சச்சோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved