MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • கை குலுக்க மறுத்த இந்தியா..! ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கதறும் பாகிஸ்தான்

கை குலுக்க மறுத்த இந்தியா..! ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கதறும் பாகிஸ்தான்

ஆசியகோப்பை லீக் சுற்று போட்டிக்கு பின்னர் இந்திய வீரர்கள் கை குழுக்க மறுத்தது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்துள்ளது.

1 Min read
Velmurugan s
Published : Sep 15 2025, 01:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிட்ட பாகிஸ்தான்
Image Credit : Getty

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிட்ட பாகிஸ்தான்

செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்த நிலையில், இந்திய வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போட்டியின் முடிவில் இந்திய வீரர்கள் தங்கள் வீரர்களுடன் கைகுலுக்காததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளித்தது. போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டின் நடத்தை குறித்தும் பிசிபி கவலை தெரிவித்துள்ளது.

24
கை குழுக்குவதைத் தவிர்த்த இந்தியா
Image Credit : Getty

கை குழுக்குவதைத் தவிர்த்த இந்தியா

போட்டிக்குப் பிந்தைய நடத்தையை மையமாகக் கொண்டு சர்ச்சை எழுந்தது, பொதுவாக மரியாதை மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் விதமாக கைகுலுக்கப்படுவது வழக்கம். கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் அவரது அணியினருடன் கைகுலுக்கவில்லை.

Related Articles

Related image1
பஹல்காம் தாக்குதல்! வெற்றிக்கு பிறகு உருகிய சூர்யகுமார்! பாக். வீரர்களை முற்றிலுமாக புறக்கணித்த இந்திய வீரர்கள்!
Related image2
UAE வீரர் வினோதமான அவுட்! அப்பீலை வாபஸ் பெற்று வாய்ப்பு கொடுத்த சூர்யகுமார்! என்ன மனுசன்யா!
34
போட்டி நடுவர் மீதும் புகார்
Image Credit : X

போட்டி நடுவர் மீதும் புகார்

"டாஸ் போட்ட நேரத்தில், இந்திய அணியுடன் கைகுலுக்க வேண்டாம் என்று போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் அணி நிர்வாகம் இந்த நடத்தையை விளையாட்டு உணர்விற்கு எதிரானது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது," என்று பிசிபி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

44
இந்திய அணியின் செய்லபாடு விளையாட்டு மாண்புக்கு எதிரானது என புகாா
Image Credit : X/@desishitposterr

இந்திய அணியின் செய்லபாடு விளையாட்டு மாண்புக்கு எதிரானது என புகாா

சல்மான் அலி ஆகா வழக்கமான போட்டிக்குப் பிந்தைய கைகுழுக்கலைத் தவிர்த்துவிட்டதாக பிசிபி எடுத்துக்காட்டியது. "இந்திய அணியின் நடத்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சல்மான் அலி ஆகா போட்டிக்குப் பிந்தைய கைகுழுக்கலைத் தவிர்த்துவிட்டார், ஏனெனில் போட்டியை நடத்துபவரும் ஒரு இந்தியர்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தை விதிகளின்படி, அணிகள் பரஸ்பர மரியாதை காட்ட வேண்டும், போட்டியின் முடிவில் எதிரணிக்கு வாழ்த்து, பாராட்டு தெரிவிப்பது உட்பட. இந்த நெறிமுறையை இந்திய அணி கடைபிடிக்கவில்லை என்று பிசிபி குற்றம் சாட்டுகிறது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
ஆசிய கோப்பை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved