கிரிக்கெட் உலகையே அதிரவைத்த பும்ராவின் அதிரடி அரைசதம்..! அரண்டு கிடக்கும் ஆஸ்திரேலியா
First Published Dec 11, 2020, 5:27 PM IST
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 நாள் பகலிரவு பயிற்சி போட்டியில் பும்ரா, மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இந்திய அணி சார்பில் அரைசதம் அடித்த ஒரே வீரரும் அவர்தான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடிய இந்திய அணி, அதன்பின்னர் இந்த போட்டியைத்தான் பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆடவுள்ளது.

அந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணியும் ஆஸ்திரேலியா ஏ அணியும் மோதும் 3 நாள் பகலிரவு பயிற்சி போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. அந்த போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் பும்ராவை தவிர வேறு எந்த வீரருமே அரைசதம் அடிக்கவில்லை என்பதுதான் வியப்பான விஷயம்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?