- Home
- Sports
- Sports Cricket
- ஜாம்பவான் சச்சின் மகனுக்கே இந்த நிலைமையா? ஒருத்தர் கூட இல்லயா: மனம் திறந்து பேசிய அர்ஜூன் டெண்டுல்கர்!
ஜாம்பவான் சச்சின் மகனுக்கே இந்த நிலைமையா? ஒருத்தர் கூட இல்லயா: மனம் திறந்து பேசிய அர்ஜூன் டெண்டுல்கர்!
Arjun Tendulkar Mental Peace Interview : இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மகனும், வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

Arjun Tendulkar interview
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மகனும், வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். கோவாவில் உள்ள தனது இல்லத்தில் 5 நாய்களை வளர்த்து வரும் அவர், அவற்றுடன் நேரம் செலவிடுவதையே தனது வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சியாகக் கருதுகிறார்.
Arjun Tendulkar mental peace secret
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆல்-ரவுண்டருமான அர்ஜுன் டெண்டுல்கர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் தனது முதல் போட்டியில் களமிறங்குவதற்கு முன்பு, சுபாங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்டில் பேசிய அவர், தனக்கு கிரிக்கெட் உலகில் நண்பர்கள் யாரும் இல்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறியுள்ள அர்ஜுன், புதிய ஜெர்சியில் களமிறங்கத் தயாராகி வருகிறார்.
Arjun Tendulkar 5 dogs Goa
"எப்போதும் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு அர்ஜுன் அளித்த பதில் அனைவரையும் கவர்ந்தது. "கோவாவில் உள்ள என் வீட்டில் ஐந்து நாய்கள் உள்ளன. அவற்றுடன் நேரம் செலவிடுவதுதான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். அது எனக்குள் ஒரு பெரிய அமைதியைக் கொண்டுவருகிறது," என்று அவர் கூறினார். கிரிக்கெட் உலகில் உள்ள நண்பர்கள் பற்றிக் கேட்டபோது, "எனக்கு கிரிக்கெட் விளையாடும் நண்பர்கள் என்று யாரும் இல்லை. என் நண்பர்கள் பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடாதவங்கதான். அவங்களுக்கு கிரிக்கெட் பத்தி பெருசா எதுவும் தெரியாது. அதனால நாங்க கிரிக்கெட் பத்தி பேசிக்கவே மாட்டோம்," என்று அர்ஜுன் விளக்கினார்.
Arjun Tendulkar Shubhankar Mishra podcast
சச்சினின் மகன் என்பதால் வரும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக வலைதள விமர்சனங்கள் பற்றிக் கேட்டபோது, "நான் விமர்சனங்களைக் கண்டு பயப்படுவதில்லை" என்று அர்ஜுன் பதிலளித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்ததால், அர்ஜுனுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், லக்னோ அணியில் முகமது ஷமி, மயங்க் யாதவ் போன்றோருடன் விளையாடும்போது, அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Arjun Tendulkar stress buster dogs
தந்தை சச்சினைத் தவிர, உங்களுக்குப் பிடித்த வீரர் யார் என்ற கேள்விக்கு, "யுவராஜ் சிங்" என்று அர்ஜுன் பதிலளித்தார். "யுவி ஒரு ஸ்பின்னர் இல்லையா?" என்று பேட்டியாளர் கேட்டதற்கு, "அவர் ஸ்பின்னர்தான், ஆனால் நான் ஒரு வேகப்பந்து வீச்சாளர்" என்று புன்னகையுடன் பதிலளித்தார். பந்துவீச்சு மட்டுமல்லாமல், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய அர்ஜுன், லக்னோ அணியின் லோயர் மிடில் ஆர்டரில் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.