- Home
- Sports
- Sports Cricket
- ஆஸ்பத்திரியில் இருந்து நேராக கிரவுண்டுக்கு: பாகிஸ்தானை கதறவிட தயாராகும் அபிஷேக் சர்மா..!
ஆஸ்பத்திரியில் இருந்து நேராக கிரவுண்டுக்கு: பாகிஸ்தானை கதறவிட தயாராகும் அபிஷேக் சர்மா..!
Ind vs Pak: இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன்பாக அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதால் ரசிகர்கள் கொண்டாட்டம்.

அபிஷேக் சர்மா பேக் டூ ஹோம்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அணியின் சக வீரர் திலக் வர்மா உறுதி படுத்தி உள்ளார். புதன் கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் தெளிவுபடுத்திய நிலையில் இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்..?
தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் போது அபிஷேக் சர்மாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்று வலி மற்றும் காய்ச்சல் இருந்ததால், டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியின் போதே அவர் உடல்நலம் குன்றி காணப்பட்டார். தற்போது சிகிச்சைகள் முடிவடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய போட்டியில் அபிஷேக்..?
இந்திய அணி உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் தனது இரண்டாவது போட்டியை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நமீபியாவை எதிர்கொள்ள உள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அபிஷேக் சர்மா நமீபியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் களம் இறக்கப்படுவது தொடர்பாக தற்போது வரை முடிவு எடுக்கப்படவில்லை. அவர் மீது அழுத்தம் கொடுக்க அணி நிர்வாகம் தயாராக இல்லை. போட்டி தொடங்கும் முன்பாக அவர் முழு தகுதி பெறும் பட்சத்தில் களம் இறக்கப்படலாம் என திலக் வர்மா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான அபார சாதனை
கடந்த 2025 ஆசிய கோப்பையில், பாகிஸ்தான் பவுலர்களை அபிஷேக் சர்மா சிதறடித்தது இன்னும் ரசிகர்களின் நினைவில் இருக்கிறது.
அப்போட்டியில் வெறும் 39 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்).
பாகிஸ்தானுக்கு எதிராக பவர்பிளே ஓவர்களில் 30+ ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆகியோரின் வேகத்தை அசால்ட்டாக எதிர்கொண்டு ரன் குவித்தார்.
தற்போதைய ஃபார்ம் (ICC T20 தரவரிசை)
தற்போது (பிப்ரவரி 2026 நிலவரப்படி), அபிஷேக் சர்மா சர்வதேச T20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் (No.1) உள்ளார். இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 245-க்கும் மேல் உள்ளது. இது எந்தவொரு பந்துவீச்சு அணிக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தும்.

