இந்திய வீரர்களை எங்க வீரர்களுடன் ஒப்பிடவே முடியாது! எங்க ஆளுங்க லெவலே வேற.. பாக்., முன்னாள் வீரரின் ஆணவ காமெடி
இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிட முடியாது; அந்தளவிற்கு பாகிஸ்தான் வீரர்கள் அபாரமான திறமைசாலிகள் என்று ஆணவமாக காமெடி செய்துள்ளார் அப்துல் ரசாக்.
விராட்கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இந்த வரிசையில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாமையும் சேர்த்து சிலர் கருத்து தெரிவிப்பதுடன், பாபர் அசாமை அதற்குள்ளாக விராட் கோலியுடன் ஒப்பிடுகிறார். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆண்டுகளாக அனைத்து விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி சாதனைகளை குவித்துவருகிறார்.
அதற்குள்ளாக விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவதே தவறு. இந்த லெட்சணத்தில், விராட் கோலி - பாபர் அசாம் ஒப்பீடு குறித்து பேசும்போது, இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிடவே முடியாது; அந்தளவிற்கு பாகிஸ்தான் வீரர்கள் திறமையானவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் ஆணவமாக காமெடி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அப்துல் ரசாக், விராட் கோலி - பாபர் அசாமை ஒப்பிட முடியாது. இந்திய வீரர்களை பாகிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிடவே முடியாது. ஏனெனில் அந்தளவிற்கு பாகிஸ்தான் வீரர்கள் மிகத்திறமையானவர்கள். அப்படி பாபர் அசாமை ஒப்பிட வேண்டுமானால், முகமது யூசுஃப், இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், ஜாவேத் மியான்தத், ஜாஹீர் அப்பாஸ் மற்றும் இஜாஸ் அகமது போன்ற எங்கள் நாட்டு ஜாம்பவான்களுடன் ஒப்பிடலாம்.
kohli babar azam