#AUSvsIND டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் பேட்டிங் ஆர்டரில் ஆடும் வீரர் இவர்தான்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி ஆடாத 3 டெஸ்ட் போட்டிகளில் கோலியின் பேட்டிங் ஆர்டரில் யார் இறங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆடிவிட்டு கடைசி 3 டெஸ்ட்டில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். கோலி ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவு; அதேவேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு அனுகூலமான விஷயம்.
எனினும் கோலியின் பேட்டிங் ஆர்டரில் யார் இறங்குவார் என்பது பெரும் கேள்வியும் விவாதப்பொருளுமாகவும் உள்ள நிலையில், இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இறங்கும் 4வது பேட்டிங் ஆர்டரில் யார் ஆடுவது? மயன்க் அகர்வாலுடன் பிரித்வி ஷா அல்லது கேஎல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் தொடக்க வீரராக இறங்குவார். என்னை பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் ஆடுவதற்கு கேஎல் ராகுலை விட ஷுப்மன் கில் தான் சரியான வீரர். கோலி ஆடாத போட்டிகளில் அவரது பேட்டிங் ஆர்டரில் ஆடுவதற்கு ஷுப்மன் கில்லே சரியான வீரர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.