MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • பொன், பொருளை அருளும் வராஹி அம்மன் வழிபாடு.! இனி வம்புதும்பு, வழக்குகளும் உங்களை சீண்டாது.!

பொன், பொருளை அருளும் வராஹி அம்மன் வழிபாடு.! இனி வம்புதும்பு, வழக்குகளும் உங்களை சீண்டாது.!

பிரச்சனைகளால் சூழப்பட்டு மனஉறுதி குலைந்தவர்களுக்கு, வாராஹி அம்மன் வழிபாடு உடனடி தீர்வை தரும். வாராஹி அம்மன் வழிபாடு செய்வினை, எதிரிகள் தொல்லை, கடன் போன்ற கடினமான சிக்கல்களை நீக்கி, வாழ்க்கையில் தடைப்பட்ட காரியங்களை நிறைவேற்றும்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Dec 12 2025, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மனஉறுதியை தரும் தெய்வீக சக்தி
Image Credit : Asianet News

மனஉறுதியை தரும் தெய்வீக சக்தி

வாழ்க்கையில் சில நேரங்களில் பிரச்சனைகள் தொடர்ந்து வந்து சேரும். எவ்வளவு முயற்சி செய்தாலும் தீராத கடன்கள், முடிவில்லா வழக்கு சிக்கல்கள், ஆதரவில்லாத நிலைமை, எதிரிகளின் சதி – இவை மனதையும் குடும்ப அமைதியையும் குலைத்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உடனடியாக மனஉறுதியை தரும் தெய்வீக சக்தி வாராஹி அம்மன்.

25
வாராஹி அம்மனின் தெய்வீக அருள்
Image Credit : our own

வாராஹி அம்மனின் தெய்வீக அருள்

விஷ்ணுவின் வாராஹ அவதார சக்தியிலிருந்து தோன்றிய வாராஹி, தீமையை அழித்து நன்மையை வரவழைக்கும் சக்தியுடைய பரிபூரண தேவியாக கருதப்படுகிறார். 

இவள், 

  1. செய்நோய், செய்வினை, மாந்திரீகத் தோஷங்களை அகற்றுபவர்
  2.  வாழ்க்கையில் நின்று போன முயற்சிகளை நிறைவேற்றுபவர்
  3. எதிரிகளின் வலிமையை களைவிப்பவர்
  4. பக்தர்களைக் காக்கும் காவல்தெய்வம்

எந்தப் பேரிடரும் வந்தாலும், அது நம் வாழ்க்கையை திருப்பி விடாமல் காத்து நிற்பவர் வாராஹி என ஆன்மீக நூல்கள் கூறுகின்றன.

Related Articles

Related image1
Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!
Related image2
Spiritual: பணபலம், மனபலத்தை அதிகரிக்கும் மார்கழி மாத வழிபாடுகள்! கேட்டதை அள்ளிக் கொடுக்கும் விரதங்கள்.!
35
வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வாராஹி பூஜை
Image Credit : Asianet News

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வாராஹி பூஜை

வீட்டு பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி, அமைதியாக அம்மனின் ரூபத்தை மனதில் நினைத்தாலே கூட பலன் கிடைக்கும். நைவேத்தியமாக, வெள்ளை மொச்சை பருப்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உளுந்து வடை மாதுளை, எருமை தயிர் போன்ற எளிய பொருட்களையே படைக்கலாம்.கருப்பு அல்லது நீலம் நிற உடை அணிந்து வழிபடுவது அம்மனின் சக்தியுடன் நம்முடைய ஆற்றல் இணையச் செய்கிறது என்று நம்பப்படுகிறது.

45
வாரத்தின் ஒவ்வொரு நாளும் வாராஹி வழிபாட்டின் பலன்கள்
Image Credit : Asianet News

வாரத்தின் ஒவ்வொரு நாளும் வாராஹி வழிபாட்டின் பலன்கள்

ஞாயிறு – உடல் நலம், நோய் நீக்கம்

திங்கள் – மன அமைதி, வீட்டில் சமரசம்

செவ்வாய் – வீடு/நில பிரச்சனைகள் தீர்வு

புதன் – கடன் சுமை குறைவு

வியாழன் – கல்வி, அறிவு, குழந்தை பேறு

வெள்ளி – செல்வ வரம், காரிய வெற்றி

சனி – தடைகள் நீக்கம், பாதுகாப்பு

அம்மனை தொடர்ந்து நினைத்தாலே நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் கரைந்து விடும்.

55
பக்தர்களின் குரலை உடனே கேட்கும் தாய்
Image Credit : Asianet News

பக்தர்களின் குரலை உடனே கேட்கும் தாய்

வாராஹி அம்மன் ஒரு தெய்வம் மட்டுமல்ல, நெருக்கடி நேரத்தில் பிள்ளைகளின் அழுகுரல் கேட்டு ஓடிவரும் அன்னையின் உருவம்.மனத்தில் சுமையாக இருக்கும் கோரிக்கையை எளிமையாக சொல்லினாலே போதும். வழக்கு சிக்கல் ஆண்டுகளாக நீடித்தாலும் தீர்விற்கான பாதை திறக்கும். வீட்டில் சச்சரவு இருந்தாலும் சமாதானம் உருவாகும், கடன் போன்ற கடின பிரச்சனைகளும் மெதுவாக வாடி மறைந்து போகும்

வராஹி வழிபாடு எற்றையெல்லாம் தரும் தெரியுமா?

  • வாழ்க்கையில் தடைப்பட்ட காரியங்கள் விரைவில் நிறைவேறும்
  • எதிரிகள் உங்களை பாதிக்க முடியாத நிலை உருவாகும்
  • புத்திசாலித்தனமும் தைரியமும் அதிகரிக்கும்
  • குடும்பத்தில் அமைதி நிலைத்து நிற்கும்
  • கடன்கள், வழக்குகள், தொல்லைகள் ஒட்டவே முடியாது

வாராஹி அம்மனை நம்பிக்கையுடன் ஒருமுறை அழைத்தாலே வாழ்க்கையில் ஒளி மலரும் என்று ஆன்மீக அறிஞர்கள் கூறுகின்றனர்.

சாதாரண பக்தரின் மனக்குமுறலையும் கேட்டு அருள்புரியும் சக்திநாயகி வாராஹி அம்மன். அவளின் அருள் இருந்தால் வாழ்க்கையில் எந்த தடையும் நிரந்தரமல்ல. அம்மன் அருள் என்றும் உங்களுடன் நிலைக்கும். 

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!
Recommended image2
Spiritual: பணபலம், மனபலத்தை அதிகரிக்கும் மார்கழி மாத வழிபாடுகள்! கேட்டதை அள்ளிக் கொடுக்கும் விரதங்கள்.!
Recommended image3
அடுத்தடுத்து பிரியும் தம்பதிகள்.! திருமணம் நடத்தி வைப்பதை நிறுத்திய பெங்களூர் கோவில்.! அதிர்ச்சி காரணம்.!
Related Stories
Recommended image1
Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!
Recommended image2
Spiritual: பணபலம், மனபலத்தை அதிகரிக்கும் மார்கழி மாத வழிபாடுகள்! கேட்டதை அள்ளிக் கொடுக்கும் விரதங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved