MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!

Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம் சட்ட மற்றும் குடும்ப சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஒரு சிறப்பு தலமாகும். செவ்வாய்கிழமை வழிபாடு, வன்னிமரத்து ஈசன், தேன் உறிஞ்சும் விநாயகர் ஆகியவை இத்தலத்தின் முக்கிய பரிகாரங்களாக விளங்குகின்றன.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Dec 11 2025, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இனி சட்டம் உங்கள் மக்கம்
Image Credit : Asianet News

இனி சட்டம் உங்கள் மக்கம்

சிவனின் அருளாலும் சரித்திரப் பெருமைகளாலும் விளங்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம், வழக்குகள், மனக்கசப்புகள், குடும்பத் தகராறுகள் போன்ற சிக்கல்களில் சிக்கி தவிக்கும் பக்தர்களுக்கு சிறப்பான பரிகாரம் தரும் திவ்யத் தலம். மூவர் முதலிகளால் பாடப்பட்ட 46-வது காவிரி வடகரைத் தலமாக விளங்கும் இத்தலம், “சாட்சிநாதர்” என்ற பெயருக்கே உரியவாறு நியாயத்திற்கு சாட்சி நின்று பக்தர்களை காத்திடும் இடமாக கருதப்படுகிறது.  கும்பகோணத்தில் இருந்து சுவாமி மலை செல்லும் வழியில், புளியஞ்சேரி சாலையில் பயணித்தால் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் திரு இன்னம்பூர் என்ற ஊர் வரும். அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புறம்பியம். 

26
செவ்வாய் கிழமை பரிகாரம் அருளை அள்ளித்தரும்
Image Credit : Asianet News

செவ்வாய் கிழமை பரிகாரம் அருளை அள்ளித்தரும்

செவ்வாய்க்கிழமைகளில் 27 சுத்த தீபங்களை ஏற்றி சாட்சிநாதரை வழிபடுவது இத்தலத்தின் திருப்பெற முடியாத பரிகாரமாகப் போற்றப்படுகிறது. தீராத வழக்குகள், நீதிமன்ற தாமதம், அநியாய குற்றச்சாட்டுகள் போன்றவற்றில் தவிக்கும் பக்தர்களுக்கு விரைவில் நியாயம் கிடைக்கச் செய்கிறார் என்பது தலைமுறைகள் கூறும் அனுபவம்.

Related Articles

Related image1
Spiritual: பணபலம், மனபலத்தை அதிகரிக்கும் மார்கழி மாத வழிபாடுகள்! கேட்டதை அள்ளிக் கொடுக்கும் விரதங்கள்.!
Related image2
Spiritual: அள்ளிக்கொடுக்கும் குபேரனை வீட்டிற்கு அழைக்க இதுதான் வழி.! இதை மட்டும் செஞ்சா போதும் உங்க வீட்டுல பணமழைதான்.!
36
நிம்மதி உங்கள் பக்கம்
Image Credit : Asianet News

நிம்மதி உங்கள் பக்கம்

ஆலயத்தின் வெளிப்புறத்தில் உள்ள தொன்மையான வன்னிமரத்து ஈசன் தனக்கே உரிய சிறப்பு உடையவர். மணமுறிவு, திருமணம் தாமதம், குடும்ப தடைகள் போன்றவற்றை நீக்க 27 முறை வலம் வந்து தீபம் ஏற்றி வேண்டுதல் செலுத்துவது முக்கியம். குறிப்பாக ஆயில்ய நட்சத்திரப் பெற்றோருக்கு இது சக்திவாய்ந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது.

46
தேன் உறிஞ்சும் விநாயகர்
Image Credit : Asianet News

தேன் உறிஞ்சும் விநாயகர்

இத்தலத்தின் அதிசயமாக விளங்குவது தேன் உறிஞ்சும் விநாயகர். விநாயகர் சதுர்த்தி அன்று பக்தர்கள் ஊற்றும் தேன் எவ்வளவு இருந்தாலும் அவர் உள்ளிழுத்து அருளுவது இன்றும் நிகழும் அதிசயம். இந்த விநாயகரை தரிசித்து சப்தசாகரத் தீர்த்தத்தைத் தொட்டு விடுவது ஏழு கடல்களில் நீராடிய புண்ணியத்துக்கு இணையான பலனளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

56
நல்லவை எல்லாம் கிடைக்கும்
Image Credit : Asianet News

நல்லவை எல்லாம் கிடைக்கும்

பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குகாம்பிகை அம்மன், பேச்சுத் திறன் – கல்வி மேம்பாடு வேண்டுபவர்களுக்கு கரும்பன்ன சொல்லி அம்மன், கிரக தோஷ நிவாரணத்திற்காக தனிக்கோயிலில் எழுந்தருளும் ராஜ தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். 

66
பக்தர்கள் அனுபவிக்கும் மெய்ப்பொருள்
Image Credit : Asianet News

பக்தர்கள் அனுபவிக்கும் மெய்ப்பொருள்

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைச் செல்லும் வழியில் அமைந்த திருப்புறம்பியம் – ஒருமுறை தரிசிப்பவரின் வாழ்க்கையில் நியாயமும் நேர்மையும் நிலைநிற்க சாட்சிநாதர் அருள்பாலிப்பார் என்பது பக்தர்கள் அனுபவிக்கும் மெய்ப்பொருள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
கோவில்
ஆன்மீகம்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: பணபலம், மனபலத்தை அதிகரிக்கும் மார்கழி மாத வழிபாடுகள்! கேட்டதை அள்ளிக் கொடுக்கும் விரதங்கள்.!
Recommended image2
அடுத்தடுத்து பிரியும் தம்பதிகள்.! திருமணம் நடத்தி வைப்பதை நிறுத்திய பெங்களூர் கோவில்.! அதிர்ச்சி காரணம்.!
Recommended image3
இந்துக்களாக மாறிய 2 லட்சம் இத்தாலியர்கள்..! ஐரோப்பாவின் 2வது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை..! இந்தியாவை நேசிப்பதாக பூரிப்பு..!
Related Stories
Recommended image1
Spiritual: பணபலம், மனபலத்தை அதிகரிக்கும் மார்கழி மாத வழிபாடுகள்! கேட்டதை அள்ளிக் கொடுக்கும் விரதங்கள்.!
Recommended image2
Spiritual: அள்ளிக்கொடுக்கும் குபேரனை வீட்டிற்கு அழைக்க இதுதான் வழி.! இதை மட்டும் செஞ்சா போதும் உங்க வீட்டுல பணமழைதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved