MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: அள்ளிக்கொடுக்கும் குபேரனை வீட்டிற்கு அழைக்க இதுதான் வழி.! இதை மட்டும் செஞ்சா போதும் உங்க வீட்டுல பணமழைதான்.!

Spiritual: அள்ளிக்கொடுக்கும் குபேரனை வீட்டிற்கு அழைக்க இதுதான் வழி.! இதை மட்டும் செஞ்சா போதும் உங்க வீட்டுல பணமழைதான்.!

குபேர வழிபாடு மூலம் செல்வத்தை ஈர்க்கும் முறைகளை இந்த கட்டுரை விவரிக்கிறது. வியாழக்கிழமைகளில் குபேர விளக்கு ஏற்றுவது, நெல்லிக்கனி படைப்பது போன்ற குறிப்பிட்ட சடங்குகளை செய்வதன் மூலம் பண நெருக்கடியை நீக்கி, குடும்பத்தில் செழிப்பை நிலைநாட்டலாம்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Dec 10 2025, 06:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
செல்வத்தை ஈர்க்கும் அதிசய வழிபாடு
Image Credit : Asianet News

செல்வத்தை ஈர்க்கும் அதிசய வழிபாடு

செல்வத்தை ஈர்க்கும் அதிசய வழிபாடுகளில் முதன்மையானது குபேரன் வழிபாடு. பணக்காரரின் கடவுள் என்றும், திருவேங்கடவருக்கே கடன் கொடுத்தவர் என்றும் அழைக்கப்படும் குபேர பகவானை சரியான முறையில் வழிபட்டால் வீட்டில் பண நெருக்கடி என்ற வார்த்தையே வராது என்பதே ஐதீகம். மகாலட்சுமியின் பரிபூரண அருளும் குபேரனின் செல்வ சக்தியும் சேரும்போது குடும்பத்தில் செழிப்பு, சாந்தி, சந்தோஷம் அனைத்தும் பெருகும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கை.

26
வியாழக்கிழமையின் அதிசய சக்தி
Image Credit : Asianet News

வியாழக்கிழமையின் அதிசய சக்தி

குபேரருக்கு மிகவும் உகந்த நாள் வியாழக்கிழமை. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போடுவது முதன்மை. வாசற்படியை சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து புனிதமாக்க வேண்டும். பின்னர் பூஜை அறையில் குபேரர் படத்தை வைத்து, இருபுறமும் தாமரை மலர் மற்றும் சங்கு வைத்து விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்று நூல்கள் கூறுகின்றன.

Related Articles

Related image1
Spiritual: வெளிநாடு செல்ல ஆசிர்வதிக்கும் சிவன்.! ஒரு முறை தரிசனம் செய்தால் வேலையுடன் விசாவும் கிடைக்குமாம்.!
Related image2
Spiritual: ஆசிர்வதிக்கும் அஷ்டமி திதி.! அருளை அள்ளித்தரும் அற்புதநாள் எப்படி தெரியுமா?
36
நெல்லிக்கனியின் முக்கியத்துவம்
Image Credit : Asianet News

நெல்லிக்கனியின் முக்கியத்துவம்

நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறார் என்ற ஐதீகம் காரணமாக, குபேர பூஜையில் நெல்லிக்கனியை கட்டாயம் நைவேத்தியமாக படைக்க வேண்டும். அவலுடன் பால், சர்க்கரை சேர்த்து படைப்பது குபேரருக்கு மிகவும் பிரியமானது. இதனால் மனநிறைவு, செல்வநிறைவு இரண்டும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

46
குபேர விளக்கின் மகிமை
Image Credit : Asianet News

குபேர விளக்கின் மகிமை

வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரை குபேர விளக்கு ஏற்றுவது மிகுந்த புண்ணியம். மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரிக்கப்பட்ட மணையில் பச்சரிசியை பரப்பி அதன் மீது ஐந்து ரூபாய் நாணயம் வைத்து, பச்சை திரியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து விளக்கு ஏற்ற வேண்டும். வடக்கு திசை நோக்கி விளக்கை வைப்பது செல்வ நுழைவாயிலை திறக்கும் ரகசியமாகக் கருதப்படுகிறது. விளக்கைச் சுற்றி கற்கண்டு வைப்பது பணவரவை அதிகரிக்கும் என்று பக்தர்கள் பெரிதும் நம்புகின்றனர்.

56
வாசற்படியில் விளக்கு ஏற்றும் சக்தி
Image Credit : Asianet News

வாசற்படியில் விளக்கு ஏற்றும் சக்தி

வீட்டின் வடக்கு நோக்கிய வாசலில் விளக்கு ஏற்றுவது குபேரனை நேரடியாக வீட்டிற்குள் அழைத்து வருவதைப் போன்றது. இது கடன் பிரச்சனைகளை நீக்கி, தொழில் வளர்ச்சியை பலமடங்கு உயர்த்தும் என்றும், நோய்-நோடிகள் அகலும் என்றும் ஐதீகம் கூறுகிறது.

66
தொடர்ந்த வழிபாட்டின் பயன்
Image Credit : Asianet News

தொடர்ந்த வழிபாட்டின் பயன்

ஒவ்வொரு வியாழக்கிழமையும் இதே முறையில் குபேர வழிபாடு செய்தால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாது. பண வரவு தடையின்றி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வாழ்வு செழிப்பால் நிரம்பும்.உங்கள் வீட்டில் பணமழை பொழிய இதை மட்டும் தொடர்ச்சியாக செய்து பாருங்கள்,குபேரன் தயங்காமல் அருள்புரிவார்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
ராசி பலன்
கோவில்
கோவில் நிகழ்வுகள்
ஏசியாநெட் நியூஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்! விமரிசையாக நடத்தி வைத்த கிராம மக்கள்!
Recommended image2
Spiritual: வெளிநாடு செல்ல ஆசிர்வதிக்கும் சிவன்.! ஒரு முறை தரிசனம் செய்தால் வேலையுடன் விசாவும் கிடைக்குமாம்.!
Recommended image3
Spiritual: ஆசிர்வதிக்கும் அஷ்டமி திதி.! அருளை அள்ளித்தரும் அற்புதநாள் எப்படி தெரியுமா?
Related Stories
Recommended image1
Spiritual: வெளிநாடு செல்ல ஆசிர்வதிக்கும் சிவன்.! ஒரு முறை தரிசனம் செய்தால் வேலையுடன் விசாவும் கிடைக்குமாம்.!
Recommended image2
Spiritual: ஆசிர்வதிக்கும் அஷ்டமி திதி.! அருளை அள்ளித்தரும் அற்புதநாள் எப்படி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved