MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: கோவில் குளத்தில் வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும் அதிசயம்.! எந்த கோவில்? எங்குள்ளது தெரியுமா?!

Spiritual: கோவில் குளத்தில் வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும் அதிசயம்.! எந்த கோவில்? எங்குள்ளது தெரியுமா?!

சென்னைக்கு அருகே திருவள்ளூரில் அமைந்துள்ள வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இங்கு பெருமாள் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் உள்ள ஹ்ருத்தாபனாசினி தீர்த்தத்தில் வெல்லம் கரைத்து வேண்டினால் நோய்கள் தீரும்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 12 2025, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கேட்ட வரம் தரும் வைத்ய வீரராகவப் பெருமாள்
Image Credit : Asianet News

கேட்ட வரம் தரும் வைத்ய வீரராகவப் பெருமாள்

சென்னை நகரத்துக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில், 108 திவ்யதேசங்களில் முக்கியமான தலம். இங்கு பெருமாள் “எவ்வுள் கிடந்தான்” எனும் திருநாமத்துடன் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். முனிவர் சாலிஹோத்ரர் கடுமையான தவம் செய்தபோது, பெருமாள் வயதான அந்தணர் வடிவில் வந்து அவரிடம் அன்னம் கேட்டார். தன் உணவைப் பகிர்ந்த முனிவருக்கு திருக்காட்சியளித்து, இத்தலத்தில் நிலைத்து அருள்பாலிக்க ஆரம்பித்தார் என தலபுராணம் கூறுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
பொருளாதார பிரச்சினைகள் தீரும்
Image Credit : Asianet News

பொருளாதார பிரச்சினைகள் தீரும்

இக்கோயிலின் கட்டடக்கலை கண்கவர் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய ராஜகோபுரம், நாயக்கர் கால மண்டபங்கள், கருவறையில் பள்ளிகொண்ட பரந்தாமன் திருமேனி — அனைத்தும் பக்தருக்கு ஆன்மீக அமைதியை அளிக்கின்றன. பெருமாளுக்கு சிறப்பு வஸ்திரம் சாத்துவது இங்குள்ள முக்கிய பிரார்த்தனை. வெளியே கிடைக்காத அந்த வஸ்திரத்தை பக்தர்கள் முன்பதிவு செய்து பெறுகின்றனர். தாயார் கனகவல்லியாக அருள்பாலிக்கிறார்; அவரை வழிபட்டால் பொருளாதார பிரச்சினைகள் தீரும் என நம்பப்படுகிறது.

Related Articles

Related image1
Spiritual: பாவத்தை போக்கும் பல்லிகள்.! காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் ரகசியம் தெரியுமா?!
Related image2
Spiritual: குடிசை வீட்டில் வசிப்பவரை குபேரன் ஆக்கும் சஸ்திர பந்தம்.! தினமும் 27 முறை படித்தால் போதும்.! டாடா - பிர்லா வரிசையில் உங்கள் பெயர்.!
34
 ஹ்ருத்தாபனாசினி தீர்த்தக் குளம் மிகப்புனிதமானது
Image Credit : Asianet News

ஹ்ருத்தாபனாசினி தீர்த்தக் குளம் மிகப்புனிதமானது

இங்குள்ள ஹ்ருத்தாபனாசினி தீர்த்தக் குளம் மிகப்புனிதமானது. இதன் நீரைப் பார்த்தாலோ, தொட்டாலோ வேதனைகள் நீங்கும்.வெல்லம் கரைத்து வேண்டினால் உடல் நோய்கள் விலகும் என நம்பிக்கை. உப்பு, மிளகு வைத்து வேண்டுவது சருமநோய்களுக்கு பரிகாரம். பித்ருக் கடன் செலுத்த, நோய் நீக்க, சிறுமிகளுக்கான காதுகுத்து, துலாபாரம் போன்ற சடங்குகள் இங்கே நடத்தப்படுகின்றன.

44
ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம்
Image Credit : Asianet News

ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தத் திருக்கோயிலை தரிசிப்பது வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு வழங்கும். ஒருமுறை தரிசித்தால் பெருமாளின் திருவருள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Related Stories
Recommended image1
Spiritual: பாவத்தை போக்கும் பல்லிகள்.! காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் ரகசியம் தெரியுமா?!
Recommended image2
Spiritual: குடிசை வீட்டில் வசிப்பவரை குபேரன் ஆக்கும் சஸ்திர பந்தம்.! தினமும் 27 முறை படித்தால் போதும்.! டாடா - பிர்லா வரிசையில் உங்கள் பெயர்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved