MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: குடிசை வீட்டில் வசிப்பவரை குபேரன் ஆக்கும் சஸ்திர பந்தம்.! தினமும் 27 முறை படித்தால் போதும்.! டாடா - பிர்லா வரிசையில் உங்கள் பெயர்.!

Spiritual: குடிசை வீட்டில் வசிப்பவரை குபேரன் ஆக்கும் சஸ்திர பந்தம்.! தினமும் 27 முறை படித்தால் போதும்.! டாடா - பிர்லா வரிசையில் உங்கள் பெயர்.!

பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம், முருகப் பெருமானின் அருளைப் பெற்றுத் தரும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடாகும். தொழில், உடல்நலம் போன்ற வாழ்வில் ஏற்படும் தடைகளை நீக்கி இமாலய வெற்றியை அடைய, இந்த பந்தத்தை தினமும் பாராயணம் செய்யலாம். 

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 12 2025, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம்: ஹிமாலய வெற்றியைத் தரும்
Image Credit : Asianet News

பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம்: ஹிமாலய வெற்றியைத் தரும்

 வழிபாடு சஸ்திர பந்தம் என்பது முருகப் பெருமானின் அருளை முழுமையாகப் பெற்ற மகான் பாம்பன் சுவாமிகள் அருளிய எட்டு பந்தங்களில் ஒன்றாகும். கலியுக மக்களின் துன்பங்கள் நீங்கி, அவர்கள் வாழ்வில் வெற்றி காண வேண்டும் என்ற நோக்கத்துடன் சுவாமிகள் வழங்கிய இந்தப் பந்தம், பலருடைய வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு சக்தி வாய்ந்த வழிபாட்டு முறையாகும்.

27
சஸ்திர பந்தத்தின் மகத்துவம்
Image Credit : Asianet News

சஸ்திர பந்தத்தின் மகத்துவம்

இந்த சஸ்திர பந்தம், தொழிலில் முடக்கம் ஏற்பட்டவர்கள், தொழிலே இல்லாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தடைகளை நீக்கி, இமாலய வெற்றியைப் பெறச் செய்துள்ளது. பல பேருடைய வாழ்க்கையை மாற்றிய மந்திரம் சஸ்திர பந்தம். பலபேர் தொழிலை கொடி பறக்கச் செய்தது சஸ்திர பந்தம். முடங்கிய தொழிலை தூக்கி நிப்பாட்டியது சஸ்திர பந்தம் என்றும் அதன் மகத்துவத்தை  ஆன்மிகஅறிஞர்கள் அழுத்தமாக பதிவு செய்துள்ளனர். இதை இன்றுவரை பாராயணம் செய்பவர்களுக்கு அதன் அருமை பெருமைகள் பற்றி விளக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் அவர்கள்  குறிப்பிடுகின்றனர்.

Related Articles

Related image1
Spiritual: ஜாதகம் இல்லாதவர்களின் தோஷங்களை நீக்கும் பரிகாரம்! எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா?
Related image2
Spiritual: பாவத்தை போக்கும் பல்லிகள்.! காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் ரகசியம் தெரியுமா?!
37
சஸ்திரம் என்றால் என்ன?
Image Credit : ai

சஸ்திரம் என்றால் என்ன?

பொதுவாக, இலக்கை நோக்கி ஏவப்படும் ஒரு ஆயுதத்தை அஸ்திரம் என்று சொல்வார்கள். ஆனால் சஸ்திரம் என்பது வேறுபட்டது.

அஸ்திரம்: இருந்த இடத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுவது (எடுத்துக்காட்டு: வில்லில் இருந்து அம்பை எய்வது).

சஸ்திரம்: இருந்த இடத்திலிருந்தே இலக்கை அடைய நீங்கள் பாராயணம் செய்வது.

சஸ்திர பந்தத்தை பாராயணம் செய்வதன் மூலம், நீங்கள் இருந்த இடத்திலிருந்தே உங்கள் இலக்கை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிகரமாக முடியும் என்று விளக்கப்படுகிறது.

47
பாராயண முறை மற்றும் நேரம்
Image Credit : ai

பாராயண முறை மற்றும் நேரம்

சஸ்திர பந்தத்தை தினமும் 27 முறை பாராயணம் செய்ய வேண்டும். இதைச் செய்ய மிக உகந்த நேரம்:

சூரிய உதயத்திற்கு முன்

சூரிய அஸ்தமனத்திற்குப் பின்

சூரிய உதயத்திற்குப் பிறகு நாம் செய்யும் மந்திர ஜெபங்கள் மற்றும் தியானங்களின் பலனில் 90% சூரியன் எடுத்துக் கொள்வார். ஆனால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சந்திரன் வந்துவிடுவதால், அந்த நேரத்தில் செய்யப்படும் மந்திரங்கள், எந்திரங்கள், தந்திரங்கள் ஆகியவற்றிற்கு சக்தி அதிகம். அதனால்தான், அதிக பலன்களைப் பெற இந்த இரண்டு நேரங்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறது.

57
பாம்பன் சுவாமிகளின் பெருமை
Image Credit : ai

பாம்பன் சுவாமிகளின் பெருமை

பாம்பன் சுவாமிகள் கலியுகத்தில் முருகப் பெருமானை நேராகக் கண்ட ஞானவான். ஒருசமயம் குதிரை வண்டி ஏறி அவருடைய இரண்டு கால்களும் முறிந்தபோது, மருத்துவர்கள் கால்கள் கூட வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர். அப்போது முருக பெருமானே அவருக்கு காட்சி கொடுத்து, அவருடைய கால்களை குணப்படுத்தினார். இன்றும், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவர் தங்கியிருந்த வார்டில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜை நடப்பதாக் குறிப்பிடப்படுகிறது.

67
கவனத்தில் கொள்ள வேண்டியவை
Image Credit : Asianet News

கவனத்தில் கொள்ள வேண்டியவை

யார் படிக்கலாம்? இந்த சஸ்திர பந்தத்தை படிப்பதற்கு எந்தவொரு ராசி, நட்சத்திரம், லக்னம் பார்க்க வேண்டியதில்லை. இறை வழிபாடு என்பது அனைவருக்கும் பொதுவானது.

வழிபாடு vs. பரிகாரம்

ராசிக்கல் அணிவது, எலுமிச்சை பழம் அரிந்து வைப்பது போன்ற பரிகாரங்களை விட, இறை வழிபாடு மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும். சரணாகதி அடைவது மட்டுமே உடனடி பலனைத் தரும் என்றும், இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 

77
எந்திர வடிவம்
Image Credit : Pinterest

எந்திர வடிவம்

சஸ்திர பந்தத்தை வேல் வடிவில் உள்ள எந்திரமாக வாங்கி வைத்து, அதற்கு மலர்கள் தூவி, தூப தீப ஆராதனைகள் காட்டி பூஜை செய்ய வேண்டும். அதை ஸ்டிக்கர் போல சுவரில் ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.சஸ்திர பந்தத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால், நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பது பாம்பன் சுவாமியின் அருள்வாக்கு

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved