MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: ஜாதகம் இல்லாதவர்களின் தோஷங்களை நீக்கும் பரிகாரம்! எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா?

Spiritual: ஜாதகம் இல்லாதவர்களின் தோஷங்களை நீக்கும் பரிகாரம்! எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் தெரியுமா?

ஜாதகம் இல்லாதவர்கள் சந்திக்கும் துன்பங்கள், தடைகள் விலக சில எளிய பரிகாரங்கள் உள்ளன. ஜீவராசிகளுக்கு உதவுவது, பெரியோரை மதிப்பதுடன், விருத்தாசலத்தில் உள்ள 18 அடி ஆழத்து விநாயகரை வணங்குவதன் மூலம் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 10 2025, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
துன்பங்கள் விலகி நலமான வாழ்க்கை அமையும்
Image Credit : Asianet News

துன்பங்கள் விலகி நலமான வாழ்க்கை அமையும்

ஜாதகம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் எதிர்நீச்சல், தடை, மனக் கலக்கம் போன்ற பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால், சில எளிய பரிகாரங்களைச் செய்தாலே இத்தகைய துன்பங்கள் விலகி நலமான வாழ்க்கை அமையும். முதலில், பசுமாடுகளுக்கு தீவனம் அளித்தல், நாய்களுக்கு உணவு போடுதல், பறவைகளுக்கு நவதானியம் வைப்பது போன்ற கருணை செயல்கள் முக்கியம். அதோடு பெற்றோருக்கும், மூத்தோர்களுக்கும் மரியாதை கொடுத்து அவர்களின் ஆசியை பெறுதல் அவசியம்.

24
கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்
Image Credit : Asianet News

கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்

ஜாதகம் இல்லாதவர்கள் ஒரு நல்ல முற்றிய தேங்காயில் பேரீச்சம் பழம், முந்திரி, கரும்புச் சர்க்கரை சேர்த்து அரச மரத்தின் அடியில் புதைத்தால் துன்பங்கள் குறையும் என கூறப்படுகிறது. அதேபோல் பச்சரிசி, தேங்காய் துருவல், வாழைப்பழம் ஆகியவற்றை நாகாத்தம்மன் சிலை முன்பு வைத்து வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

Related Articles

Related image1
ஜாதகம் இல்லையா? பெயர் பொருத்தம் போதும்.! திருமணத்திற்கு ஈசியான வழி!
Related image2
ஆன்மிக ரகசியம்: கொடுத்த பணம் திரும்ப கைக்கு வரணுமா? இந்த ஒரு பரிகாரம் போதும்!
34
அருள் தரும் பாதாள விநாயகர்
Image Credit : meta ai

அருள் தரும் பாதாள விநாயகர்

ஜாதகம் இல்லாதவர்களுக்கு மிக முக்கியமான தீர்த்தஸ்தலம் விருத்தாசலத்தில் உள்ள பழமலைநாதர் கோயில் ஆகும். இங்கு 18 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகர் மிகவும் சக்திவாய்ந்தவர். இவரை “பாதாள விநாயகர்” என்றும் அழைக்கின்றனர். இவரை வணங்கினால் 21 பிறவிகளில் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும், திருமணத்தடை நீங்கி, கல்வி, செல்வம், குழந்தை பாக்கியம் அனைத்தும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

44
ஆழத்து விநாயகரை வணங்கி வாழ்வில் நன்மைகளைப் பெறலாம்
Image Credit : Asianet News

ஆழத்து விநாயகரை வணங்கி வாழ்வில் நன்மைகளைப் பெறலாம்

சங்கடஹர சதுர்த்தி நாளில் வநாயகரை வழிபட்டால் அனைத்து சங்கடங்களும் விலகும். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் 108 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றனர். திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் பெருகும் ஆழத்துப் பிள்ளையாரைப் பேணுவோம்என்ற பாடல் இவரின் அருளை எடுத்துரைக்கிறது. ஆகவே, ஜாதகம் இல்லாதவர்கள் ஆழத்து விநாயகரை வணங்கி வாழ்வில் நன்மைகளைப் பெறலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved