MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • குழந்தை பிறந்த பிறகு அரைஞாண் கயிறு ஏன் கட்டுகிறோம்? இதில் இத்தனை நன்மைகள் ஒளிந்துள்ளனவா?

குழந்தை பிறந்த பிறகு அரைஞாண் கயிறு ஏன் கட்டுகிறோம்? இதில் இத்தனை நன்மைகள் ஒளிந்துள்ளனவா?

Waist Cord Benefits in Tamil: பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான ஆண்கள் வரை அரை ஞாண் கயிறு கட்டகட்டுவதை பார்ததிருப்போம்.  இதை ஏன் குழந்தைகளுக்கு கட்டாயம் கட்ட வேண்டும் என்பதற்கான காரணங்களை இந்த பதிவில் முழுமையாக காணலாம். 

2 Min read
Author : Dinesh TG
| Updated : Apr 09 2023, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

குழந்தை பிறந்த ஓரிரு வாரங்களில், அது ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி அல்லது பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, அந்த குழந்தைகளின் இடுப்பில் நாம் அரை ஞான் கயிறு கட்டி விடுவோம். இது மூட நம்பிக்கையோ அல்லது மத சம்பிரதாயம் என்றோ தான் இன்றைய இளம் தலைமுறையினர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலர், வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறினார்கள் அதனால் தான் கட்டினோம் என்று கூறுகிறார்கள்.

waist Cord Benfits in Tamil: பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான ஆண்கள் வரை அரை ஞாண் கயிறு கட்டகட்டுவதை பார்ததிருப்போம். இதை ஏன் குழந்தைகளுக்கு கட்டாயம் கட்ட வேண்டும் என்பதற்கான காரணங்களை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

இந்த அரைஞாண் கயிறு கட்டுவதால் அறிவியல், ஆன்மீக, மருத்துவ நலன்கள் ஒரு சேரக் கிடைக்கிறது.ஆகையால் தான் நமது முன்னோர்கள் முதல் இன்று வரை நாம் அனைவரும் காலகாலமாய் இதனை கட்டி வருகிறோம்.

 

பெயர் காரணம் :

அரைஞாண் என்பதில் அரை எனில் - இடுப்பு வரையிலான பாதி உடலை குறிக்கிறது. ஞான் என்பது- கயிரைக் குறிக்கும் சொல் ஆகும். இவை இரண்டையும் இணைத்தே அரைஞாண் என்று சொல்லப்பட்டது. குழந்தை பிறந்த சில நாட்களில் அவர்களின் இடுப்பில் தங்கம்,வெள்ளி அல்லது கருப்பு நிறத்தில் அரை ஞான் கயிறு கட்டி விடுவோம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23

ஆண்கள் கட்டிக்கொள்வதால் என்ன பயன்:

ஹெர்னியா தடுக்கப்படுகிறது:

இதை எப்போதும் இடுப்பில் கட்டி இருப்பதால் , குடலிருக்க நோய் வெகு விரைவாக வராது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். தவிர அதீத உடை எடையுள்ள அல்லது அதிக பளு சுமக்கும் பணிகளை செய்பவர்களுக்கு இந்த குடல் இரக்க நோய் எளிதில் வரும். ஹெர்னியா எனப்படும் இந்த நோய் ஆண்களுக்கு அதிக அளவில் அதிகமாக தாக்க வாய்ப்பு இருப்பதால் ஆண்களுக்கு எல்லா வயதிலும் இதனை அணிய சொல்கிறார்கள்.

ஆண்மை பிரச்சனைகள்:

தவிர இதனை ஆண்கள் அணிவதால் அவர்களுக்கு விரைவாதம், அண்டவாதம் போன்ற ஆண்மை கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது என்று நமது முன்னோர்கள் கூடியுள்ளனர். அதோடு சிறுநீரக பிரச்சைகளையும் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் அவர்கள் அணிய வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவுமில்லை. பெண்க் குழந்தைகள் அவர்கள் பருவம் அடையும் வரை மட்டுமே கட்டி கொள்ள வேண்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

33

தீய சக்திகள் நெருங்காமலிருக்க:


கருப்பு நிறமானது துஷ்ட சத்தி மற்றும் எதிர்மறை சக்திகளை அண்ட விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. எப்போதும் நாம் கருப்பு நிறக் கயிறை கையில் வைத்துக் கொள்ள இயலாத காரணத்தினால் நம் உடம்பில் கருப்பு நிற கயிறுகளை கட்டுவார்கள் .இப்படி கட்டுவதன் மூலம் திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திஅவர்களை எளிதில் தாக்காது என்றும் கூறப்படுகிறது . அதனால் தான் இதனை இடுப்பில் கட்டி விடுகிறர்கள்.

கருப்பு நிறம் துஷ்ட சக்திகளை அழிக்கும் வலிமை பெற்றது. இதனால் தான் வயதிற்கு வந்த பெண்கள், கருவை சுமக்கும் பெண்கள் வெளியில் செல்லும் போது அவர்கள் கையில் கரித்துண்டை கொடுத்து அனுப்புவார்கள்.

ஆன்மீக ரீதியாக:

எவர் ஒருவர் அரை ஞான் கயிறை உடலில் கட்டி இருக்கிறார்களோ அவர்களை நிர்வாணமாக பார்க்கப் பட முடியாது என்று புராணங்கள் கூறியுள்ளது. ஆரம்ப காலத்தில் கருப்பு நிறத்தில் இருக்கும் கயிரை தான் நமது முன்னோர்கள் இடுப்பில் கட்டினார்கள். காலம் செல்ல செல்ல அவங்க அவங்க வசதிகளுக்கு ஏற்ப வெள்ளியினால், தங்கத்தினாலும் கட்ட தொடங்கியுள்ளார்கள் 

ஆக மருத்துவ ரீதியாக, ஆன்மீக ரீதியில் அரை ஞான் கயிறை கட்டுவதில் உள்ள சிறப்பும், அருமையும்,அவசியமும் தெரிந்து கொண்டோம்.

வடக்கு திசையில் வீடு கட்டி இருக்கீங்களா?அப்ப எல்லா ரூமும் சரியான இடத்தில கட்டி இருக்காங்களா செக் பண்ணிக்கங்க

About the Author

DT
Dinesh TG

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Bhagavan: சனி பகவான் கருப்பாக இருக்க காரணம் என்ன தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Recommended image2
May 2026 Rasi Palan: அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image3
Astrology: சனி பகவான் அருள் கிடைத்தாச்சு..! இந்த 4 ராசிகளுக்கு பணமும் புகழும் சேரப்போகுது..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved