MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: கடன்களை அடைக்கும் 1 ரூபாய் நாணயம்.! ஆச்சரியமான பரிகாரங்கள்.!

Spiritual: கடன்களை அடைக்கும் 1 ரூபாய் நாணயம்.! ஆச்சரியமான பரிகாரங்கள்.!

கடன் மற்றும் நிதி நெருக்கடியால் அவதிப்படுபவர்களுக்காக, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் வெள்ளை உறையைக் கொண்டு செய்யப்படும் எளிய ஆன்மீக பரிகாரம் ஒன்று விளக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம்  கடன்களிலிருந்து விடுபட முடியும் என்று நம்பப்படுகிறது.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 13 2025, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆச்சரியமான பரிகாரங்கள்
Image Credit : Asianet News

ஆச்சரியமான பரிகாரங்கள்

சில ஜோதிட பரிகாரங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. சில ஜோதிடர்கள் கூறும் எளிய பரிகாரங்கள் செய்துதான் பார்ப்போமே எனவும் சிந்திக்க தோன்றும் வகையில் உள்ளது.  இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சிக்கல் . கடன் சுமை. எவ்வளவு முயன்றாலும், பணம் கையில் தங்காத நிலை, எதிர்பாராத செலவுகள், நிதி நெருக்கடி போன்றவை தொடர்ச்சியாக ஏற்படுகின்றன. இதனால் பலரது மனநிலை பாதிக்கப்படுவதும், குடும்பத்தில் அமைதி குறைவதும்கூட இயல்பானது. இப்படிப் பட்ட கடன் தொல்லைகளில் இருந்து விடுபட விரும்பும் அனைவருக்கும் ஒரு எளிய ஆன்மீக வழி தொடர்பான தகவல் இணையத்தில் உலா வருகிறது. அதன்படி இந்த பரிகாரம் மகாலட்சுமியின் அருளை பெறச்செய்து, பணப்புழக்கத்தை மேம்படுத்தி, நிதி நிலைமையில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

24
கடனை அடைக்கும் ஒரு ரூபாய் நாணயம்
Image Credit : Asianet News

கடனை அடைக்கும் ஒரு ரூபாய் நாணயம்

இந்த பரிகாரத்தின் மையக் கருத்து மிகவும் எளிமையானது. தேவையானவை இரண்டு பொருட்களே. ஒரு ரூபாய் நாணயம் மற்றும் ஒரு வெள்ளை நிற உறை. ஒரு ரூபாய் நாணயம் என்பது பண வரவின் தொடக்கத்தைக் குறிக்கும் சக்தி வாய்ந்த சின்னமாகக் கருதப்படுகிறது. புதியதும், சுத்தமானதுமான ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, அதை வெள்ளை நிற உறையில் வைக்க வேண்டும். வெள்ளை நிறம் தூய்மையையும் நேர்மறை ஆற்றலையும் பிரதிபலிப்பதால், இந்த உறை ஒரு ஆன்மீக புனித கருவியாகச் செயல்படும்.

அந்த உறையை உங்கள் அலமாரி, பணப்பெட்டி அல்லது நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இதைச் செய்யும் முன், மனம் அமைதியாகவும், நம்பிக்கையுடன் இருப்பதும் அவசியம். எந்த வித எதிர்மறை எண்ணங்களும் இல்லாமல், “எனது கடன்கள் தீரட்டும், மகாலட்சுமி அருளால் என் வாழ்க்கையில் செழிப்பு நிறையட்டும்” என்று மனதுள் நினைத்துக்கொண்டு வைக்கலாம்.

Related Articles

Related image1
Spiritual: நிலப் பிரச்னைகளை தீர்க்கும் வராஹி அம்மன்.! எந்தக் கிழமையில் வழிபடலாம்?
Related image2
Spiritual: நவகிரக தோஷத்தை போக்கும் அதிசய மந்திரம்.! எந்த நேரதில் சொல்ல வேண்டும் தெரியுமா?
34
கடன்கள் மெதுவாகத் தீரும்
Image Credit : Asianet News

கடன்கள் மெதுவாகத் தீரும்

இதனை நம்பிக்கையுடன் செய்வதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும், வருமானம் உயரத் தொடங்கும், கடன்கள் மெதுவாகத் தீரும். அதோடு, மன அமைதியும், நம்பிக்கையும் பெருகும். இதனை ஒருமுறை செய்துவிட்டு மறந்துவிடாமல், அவ்வப்போது அந்த உறையைக் காணும்போது, நன்றி உணர்வுடன் நினைவுகூருவது நல்லது.

ஒரு சிறிய ரூபாய் நாணயமும், ஒரு வெள்ளை உறையும்,  இதுவே இங்கே உள்ள தாந்த்ரீக ரகசியம். ஆனால் இதன் பலன், அதனைச் செய்வோர் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணம் மீதுமே சார்ந்துள்ளது. பலர் இந்த பரிகாரத்தை செய்து பார்த்து, தங்களது வாழ்க்கையில் நிதி முன்னேற்றத்தை அனுபவித்ததாக கூறுகின்றனர். 

44
முயற்சி செய்து பார்க்கலாம்
Image Credit : Asianet News

முயற்சி செய்து பார்க்கலாம்

கடன் சுமையால் மன அழுத்தத்தில் உள்ளவர்கள், இதை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். எந்தப் பெரிய செலவும் இல்லாத இந்த எளிய வழிமுறை, உங்கள் வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருளை வரவேற்கும் ஒரு துவக்கமாக அமையலாம். சிறிய நம்பிக்கை — பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved