MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இன்று சங்கடஹர சதுர்த்தி... இரவுக்குள் விநாயகரை மறக்காம கும்பிட்டுக்கோங்க.. சகல சங்கடங்களும் தீரும்..!

இன்று சங்கடஹர சதுர்த்தி... இரவுக்குள் விநாயகரை மறக்காம கும்பிட்டுக்கோங்க.. சகல சங்கடங்களும் தீரும்..!

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை எப்படி வழிபட்டால் பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம். 

2 Min read
maria pani
Published : Mar 10 2023, 09:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

புண்ணிய மாதங்களில் முக்கியமானது மாசி மாதம். உத்திராயண புண்ணிய காலத்தில் வருகின்ற இந்த மாதத்தில் நாம் செய்யும் விரதங்கள், வழிபாடுகள் அனைத்திற்கும் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் விரதங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் நல்ல பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. 

26

பெரும்பாலானோர் அதிகாலையில் எழுந்து நீராடி விரதமிருந்து விநாயகரை வழிபட தொடங்கி இருப்பார்கள். அப்படி விரதம் இருக்க இயலாதவர்கள், இன்றைய தினம் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மாலை வேளையில் தூய்மையான நீரில் நீராடி விநாயகர் வழிபாடு செய்யலாம்.

36

வீட்டில் விநாயகரை வழிபட நினைப்பவர்கள், வீட்டு பூஜையறையில் இருக்கும் விநாயகர் சிலை அல்லது திருவுருவப்படத்திற்கு பூஜைகள் செய்து வழிபடலாம். முக்கியமாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, அவருக்கு பூஜை செய்யலாம். இதையடுத்து விநாயகர் படம் அல்லது சிலைக்கு பூஜைகள் மேற்கொள்ளவேண்டும். 

46

சதுர்த்தி அன்று விநாயகரை குளிர செய்ய அஷ்டோத்திரங்களை உச்சரித்து வழிபடலாம். இதை சொல்ல முடியாதவர்கள் விநாயகர் அகவல் பாடல்களைப் பாடி வழிபடலாம். இன்றைய தினம் விநாயகரின் நாமங்களைச் சொல்லி கொண்டே அருகம்புல் அர்ச்சனை செய்வது நல்லது. வினை தீர்க்கும் ஆனைமுகத்தோனுக்கு எளிய நைவேத்தியங்கள் தான் விருப்பம். தனித்தனியாக பிரசாதம் செய்ய முடியாதவர்கள் பொரி, கடலை, வெல்லம் ஆகியவை வைத்து வழிபடலாம். 

56

இன்றைய தினம் கோயிலுக்கு சென்று விநாயகருக்கு வழிபாடு செய்பவர்கள் அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்தால் சிறப்பு வாய்ந்தது. இந்த அபிஷேகங்களை மனதார விநாயகரை நினைத்து பக்தியுடன் காண்பதால் சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். தொடர்ச்சியாக 9 சங்கடஹர சதுர்த்தி தினங்களில் கோயிலுக்கு சென்று விநாயகரை வணங்கினால் சகல சங்கடங்களும் விலகும். 

இதையும் படிங்க: மறந்தும் மற்றவர்களிடம் வாங்கக் கூடாத பொருள்கள்.. மீறினால் உங்களுக்கு கெட்ட நேரம் தொடங்கிவிடும்..

66

சங்கடஹர சதுர்த்தி அன்று சந்திரனும் செவ்வாயும் விநாயகரை வழிபட்டதால் எல்லாவிதமான நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்கள். அதனால் ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் பாதிப்பு உள்ளவர்கள் இந்த சதுர்த்தி வழிபாட்டை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதையும் படிங்க: காலை எழுந்ததும் எதை சாப்பிடணும்.. முதல்ல சிறந்த காலை உணவை பத்தி தெரிஞ்சுக்கங்க..

 

About the Author

MP
maria pani
சங்கடஹர சதுர்த்தி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved