Purattasi Kolam: புரட்டாசி ஸ்பெஷல் கோலம் டிசைன்.. உங்க வீட்டு வாசலில் ட்ரை பண்ணுங்க!
Purattasi Special Kolam: புரட்டாசி மாதத்தில் பெருமாள் பக்தர்கள் வீட்டு வாசல் மற்றும் பூஜை அறையில் வரையக்கூடிய திருமண், கிருஷ்ணர், கோபுரம், பாஞ்சஜன்யம் வடிவ கோலங்களின் சிறப்புகள் மற்றும் அவற்றை எளிமையாக வரையும் முறைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

புரட்டாசி சிறப்பு கோலம்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். இந்த மாதத்தில், குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் சிறப்பு கோலங்கள் இடுவது வழக்கம். பெருமாளின் சின்னங்களான சங்கு, சக்கரம் மற்றும் திருநாமம் ஆகியவற்றை மையமாக வைத்து வரையப்படும் கோலங்கள் இந்த மாதத்திற்கு மிகவும் விசேஷமானவை.
திருமண் வடிவ கோலம்
பெருமாளின் வைணவச் சின்னமான திருமண் வடிவத்தை மையமாகக் கொண்ட அலங்காரக் கோலம் இது. கோலத்தின் நடுப்பகுதியில் வெள்ளை நிறத்தில் U வடிவ திருமண் வரையப்பட்டு, அதன் மத்தியில் சிவப்பு நிறத்தில் ஸ்ரீசூர்ணம் போன்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
வைணவ மரபில் இந்தத் திருமண் சின்னம் திருமாலின் திருநாமத்தையும், அவரது திருவடிகளையும் குறிக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறது. திருமண் சின்னத்தைச் சுற்றி, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த சிக்குக் கோலம் போன்ற வளைவு வடிவங்கள் உள்ளன.
கிருஷ்ணர் வடிவ சிக்குக் கோலம்
திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கும் தோற்றத்தை மையமாகக் கொண்ட சிக்குக் கோலம். வளைந்து செல்லும் கோடுகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிருஷ்ணரின் உருவத்தை உருவாக்குகின்றன. ஒரு கையில் பிடித்திருக்கும் புல்லாங்குழலும், மேல் பகுதியில் அலங்கார வளைவுகளும் காணப்படுகின்றன. மொத்தத்தில், இது நுணுக்கமான புள்ளி–கோடு அமைப்புடன் வரையப்பட்ட கிருஷ்ணர் வடிவ சிக்குக் கோலம் ஆகும்.
கோபுர வடிவ கோலம்
கோயில் கோபுரத்தின் அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோலம் மிகவும் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. புள்ளிகளைச் சுற்றி வளைத்து நெளிவாக வரையப்படும் சிக்குக் கோலம் முறையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
பாஞ்சஜன்யம் கோலம்
பாஞ்சஜன்யம் என்பது பெருமாள் (விஷ்ணு) கையில் ஏந்தியிருக்கும் சங்கு . இதனை அடிப்படையாகக் கொண்டு வீட்டு வாசலில் அல்லது பூஜை அறையில் சங்கு வடிவில் இந்தக் கோலத்தை வரையலாம். கோலத்தின் மையத்தில் பெருமாளின் சங்கு போன்ற வடிவம் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் இலைகள் போன்ற வடிவில் வரையப்பட்டுள்ளது.
தேர் கோலம்
தேர் வடிவத்தில் இந்த கோலம் வரையப்பட்டுள்ளது. அதற்கு நடுவில் பாஞ்சஜன்யம் மற்றும் தாமரை பூ வரையப்பட்டுள்ளது. இந்த கோலம் போடுவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், போட்டால் பூஜை அறை மற்றும் வாசலுக்கு மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும்.
குறிப்பு: புரட்டாசி மாதத்தில் இந்த கோலங்கள் மட்டும்தான் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவரவர் விருப்பம் மற்றும் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப பெருமாள் தொடர்பான அல்லது பாரம்பரிய கோலங்களை வீட்டின் வாசலில் வரையலாம்.

