MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சிரிக்கும் புத்தர் சிலையை ஏன் வீட்டில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைத்தால் பணம் வற்றாமல் கிடைக்கும்!!

சிரிக்கும் புத்தர் சிலையை ஏன் வீட்டில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைத்தால் பணம் வற்றாமல் கிடைக்கும்!!

சிரிக்கும் புத்தர் யார், அவருடைய சிலையை ஏன் வீட்டில் வைக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களுக்கு வாஸ்து சாஸ்திரம் சொல்லும் விளக்கங்களை இங்கு காணலாம். 

1 Min read
Author : maria pani
Published : Jun 21 2023, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சிலர் வீட்டில் சிரிக்கும் புத்தர் சிலையை வைத்திருப்பார்கள். வாஸ்துபடி அதை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சிலையை வீட்டில் வைக்கும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என இங்கு காணலாம். 

24

சிரிக்கும் புத்தர் யார்?

ஜப்பானில் இருந்து வந்த ஹோதை பௌத்த மதம் மாறினார். நெடுங்காலம் தவம் செய்து ஞானோதயம் அடைந்தார். அவர் ஞானம் பெற்ற பிறகு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார். மக்களை சிரிக்க வைப்பதையே தன் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டாராம். ஹோதை பல நாடுகளுக்குச் சென்று மக்களைச் சிரிக்க வைத்தார். அப்போதிருந்து, அவர் சிரிக்கும் புத்தர் என்று அழைக்கப்பட்டார்.

34

மற்றொரு நம்பிக்கையின்படி, சிரிக்கும் புத்தர் அதிர்ஷ்டக் கடவுளர்கள் ஏழு பேரில் ஒருவராக இருப்பார் என டாவோ, ஜப்பானிய ஷிண்ட்டோ மதங்கள் நம்புகின்றன. 'சிரிப்பு புத்தர் சிலை' மகிழ்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. சிரிக்கும் புத்தரை வீட்டிற்கு கொண்டு வருவது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாகவும் நம்பப்படுகிறது. இதனால் மன அமைதியும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

44

சிரிக்கும் புத்தர் சிலையை வைக்க சரியான திசை: 

இந்த சிலையை வைக்க சரியான திசை வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைப்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. படிக்கும் அறையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைத்தால் குழந்தைகளின் மனது படிப்பில் ஈடுபடும். படுக்கையறை அல்லது சாப்பிடும் அறை, கூடல் (ஹால்) ஆகியவற்றின் தென் கிழக்கு திசையில் வைப்பதால், அதிர்ஷ்டமும், வருமானமும் கூடும். 

நம்முடைய வீட்டில் சிரிக்கும் புத்தரை வைப்பதன் மூலம், வீட்டில் எதிர்மறை ஆற்றல் முடிவுக்கு வருகிறது. ஆகவே குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மன உளைச்சல் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர். 

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Madurai chithirai thiruvizha 2026 மதுரை சித்திரை திருவிழாவில் 2026 நடக்கும் இந்த அதிசயம் பற்றிய தெரியுமா?
Recommended image2
கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்கலாமா? சுப நிகழ்ச்சிகளில் விளக்கேற்கலாமா? தேச மங்கையர்கரசியின் மனதை உருக்கும் அறிவுரை.!
Recommended image3
அட்சய திருதியை நாளில் உருவான 5 ராஜயோகங்கள்.! இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் பொற்காலம் ஆரம்பிக்குது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved