MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • உங்களுக்கு கண் திருஷ்டி இருக்கிறதா? எளிய பரிகார முறைகள் இதோ.!

உங்களுக்கு கண் திருஷ்டி இருக்கிறதா? எளிய பரிகார முறைகள் இதோ.!

எப்பேர்பட்ட காரியத்தையும் தடை செய்யக்கூடிய தன்மை கண் திருஷ்டிக்கு உண்டு. “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. கண்திருஷ்டி முதல் தீய சக்தி வரை குடும்பத்தை நெருங்காமல் இருக்க சில பரிகாரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Ramprasath S
Published : May 26 2025, 11:07 AM IST| Updated : May 26 2025, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கண் திருஷ்டியின் அறிகுறிகள் என்ன?
Image Credit : Asianet News

கண் திருஷ்டியின் அறிகுறிகள் என்ன?

கண் திருஷ்டிப் பட்டவர்களின் உடலில் எப்போதும் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி ஏற்படும். புது உடை அணிந்தால் அது கிழியலாம் அல்லது கருப்புக் கறைகள் படலாம். தொடர்ந்து பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, இழப்பு என ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். உறவினர்களிடையே பகை, கணவன் - மனைவி இடையே சண்டை, சுப நிகழ்ச்சிகள் செய்வதில் தடை, கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள், தூக்கமின்மை ஆகியவையும் கண் திருஷ்டியின் அறிகுறிகளே.

28
கண் திருஷ்டி பரிகாரம் செய்யும் முறை
Image Credit : Asianet News

கண் திருஷ்டி பரிகாரம் செய்யும் முறை

கண் திருஷ்டியை போக்குவதற்கு சில எளிய பரிகாரங்களை வீட்டிலிருந்து செய்யலாம். வயதில் மூத்த ஒருவரைக் கொண்டு திருஷ்டி பரிகாரம் செய்ய வேண்டும். செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை பொழுதுகளில் தனியாக அல்லது கூட்டமாக கிழக்கு திசை நோக்கி நின்று கொள்ள வேண்டும். நிற்கின்ற அனைவருக்கும் ஒரே நபரே திருஷ்டியை கழிக்க வேண்டும்.

Related Articles

Related image1
குழந்தைக்கு கண் திருஷ்டிபட்டால் இந்த அறிகுறிகள் காட்டி கொடுக்கும்
Related image2
பாத்ரூமில் இந்த '4' பொருட்கள் வைத்தால் போதும்.. கண் திருஷ்டி நீங்கும்!
38
கற்பூரம் எரித்தல்
Image Credit : Asianet News

கற்பூரம் எரித்தல்

கண் திருஷ்டியை விரட்டுவதற்கு கற்பூரம் எரிப்பது காலம் காலமாக பின்பற்றி வரும் வழக்கமாகும். உடல் முழுவதும் கற்பூரத்தால் சுற்றி எடுத்து, அதை வாசலுக்கு வெளியில் வைத்து எரித்து விட வேண்டும். இதை நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக செய்ய வேண்டும். உப்பு, மிளகாய் வைத்து எரிப்பது, எலுமிச்சம்பழம், தேங்காய், பூசணிக்காய் ஆகியவற்றைக் கொண்டும் சுற்றிப் போடலாம்.

48
மஞ்சள்/மை பொட்டு வைத்தல்
Image Credit : Asianet News

மஞ்சள்/மை பொட்டு வைத்தல்

நெற்றியில் மஞ்சள் நிற பொட்டு வைத்துக் கொள்ளலாம். இது தீய கண் பார்வைகளை திசை திருப்புவதோடு நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். அதேபோல் நெற்றியில் கருப்பு மை போட்டு வைப்பது கண் திருஷ்டியை தடுக்கும். காதுக்குப் பின்பகுதிகளிலும் கருப்பு மை பொட்டு வைத்துக் கொள்ளலாம். மேலும் ருத்ராட்சம் அணிந்து கொள்வது தெய்வீக சக்தியை நமக்கு தருகிறது. தீய சக்திகள் நம்மை நெருங்காமல் இருப்பதற்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம்.

58
வாசலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
Image Credit : Asianet News

வாசலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

வாசலில் மிகப்பெரிய பாத்திரம் வைத்து அதில் பூக்களை மிதக்க வைக்கலாம். திருஷ்டியை உள்வாங்கிக் கொள்ளும் திறன் பூக்களுக்கு உள்ளது. வீட்டு வாசலில் ரோஜா போன்ற செடிகளை வளர்க்கலாம் அல்லது வீட்டு வாசலில் வீட்டிற்கு வருபவர்களின் ஒட்டுமொத்த பார்வையை திசை திருப்பும் வகையில் அகோரமான பொம்மை, பூசணிக்காயை தொங்கவிடலாம். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் வாழையை நடலாம். வாழைக்கு கண் திருஷ்டியை களையும் குணமுண்டு. வீட்டிற்கு வருபவர்களின் பார்வையை திசை திருப்புவதற்கு வீட்டில் மீன் தொட்டியை வளர்க்கலாம்.

68
நிலைப்படியில் கட்ட வேண்டியவை
Image Credit : Asianet News

நிலைப்படியில் கட்ட வேண்டியவை

வீட்டிற்குள் கெட்ட சக்தியில் நுழையாமல் தடுக்க எலுமிச்சம்பழம் உதவி புரிகிறது. கண் திருஷ்டி விலக விரும்புபவர்கள் வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் கற்றாழையை தொங்கவிடலாம் அல்லது எலுமிச்சை, பச்சை மிளகாய் கோர்த்து அதை நிலைப்படியில் கட்டி தொங்க விடலாம். கடைகளில் கிடைக்கும் படிகார கல்லை வாங்கி அதில் கருப்பு கயிறை சுற்றி அதை வீட்டு வாசலில் நிலைப்படியில் கட்டி தொங்கவிடலாம்.

78
ஆகாய கருடன் கிழங்கு பரிகாரம்
Image Credit : Asianet News

ஆகாய கருடன் கிழங்கு பரிகாரம்

கண் திருஷ்டியை போக்கும் வல்லமை ஆகாய கருடன் கிழங்கிற்கு உண்டு. நாட்டு மருந்து கடைகளில் இதை வாங்கி வேர்களை நீக்காமல் கழுவி அதில் மஞ்சள், குங்குமம் வைத்து வீட்டு வாசலில் கட்டி விட வேண்டும். மறந்தும் இதை வீட்டிற்கு உள்ளே கட்டி விடாதீர்கள். கோயில்களில் கிடைக்கும் அபிஷேக தீர்த்தங்கள் மற்றும் கங்கை, காவிரி முதலான புனித நதிகளின் தீர்த்தங்களை வீடுகளில் தெளித்து விடலாம். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டும் தன்மை கொண்டது.

88
தீய ஆற்றல்களை போக்கிக் கொள்ளுங்கள்
Image Credit : Asianet News

தீய ஆற்றல்களை போக்கிக் கொள்ளுங்கள்

ஒருவர் தீய எண்ணத்துடன் நம்மை பார்க்கும் பொழுது நமக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், துரதிஷ்டம் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகிறது. உங்களுக்கு கண் திருஷ்டி இருப்பதாக நினைத்தால் மேற்கூறிய பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் பொதுவான மற்றும் ஆன்மீக தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை மட்டுமே. ஏசியாநெட் தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved