MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆஜர்..! CBI கிடுக்கிப்பிடி விசாரணை..! கரூரில் பரபரப்பு

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேரில் ஆஜர்..! CBI கிடுக்கிப்பிடி விசாரணை..! கரூரில் பரபரப்பு

விசாரணைக்கு ஆஜராகியுள்ள தவெக இரண்டாம்கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோரிடம் பரப்புரைப் பயண வாகனத்தில் இருந்த சிசிடிவி காட்சி விவரங்கள், பொதுக்கூட்ட ஏற்பாடுகள்,  குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள்  

1 Min read
Author : Thiraviya raj
Published : Nov 24 2025, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணைக்கு தவெக பொதுச் செயலாளர் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் சிபிஐ விசாரணைக்கு தான் தோன்றிமலை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தின் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐயின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, தவெக முக்கிய நிர்வாகிகளான பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சிபிஐ அதிகாரிகளிடம் ஆஜராகினர். இது விசாரணையின் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Image Credit : SOCIAL MEDIA

ஆரம்பத்தில் தமிழக போலீஸின் சிறப்புப் புலனாய்வுக் குழு, ஒருநபர் ஆணையம் விசாரித்தது. ஆனால், அரசியல் தலையீடு மற்றும் நம்பிக்கை இல்லாமை காரணமாக, பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்று, அக்டோபர் 7, 2025 அன்று வழக்கை சிபிஐயின் கையில் ஒப்படைத்தது.

தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர் பெயர் எஃப்ஐஆரில் இடம்பெறவில்லை. ஆனால் அரசியல் வட்டாரத்தில் அவரது பொறுப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

33
Image Credit : Google

ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூர் பகுதிக்கு வந்து நேரில் ஆய்வு செய்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ள தவெக இரண்டாம்கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோரிடம்பரப்புரைப் பயண வாகனத்தில் இருந்த சிசிடிவி காட்சி விவரங்கள், பொதுக்கூட்ட ஏற்பாடுகள், கூட்டத்தைக் கட்டுப்படுத்தியதற்கான முன்னெச்சரிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
பா.ஜ.க.வில் திடீர் நடவடிக்கை.! நடந்தது என்ன? கருப்பு முருகானந்தம் கொடுத்த ஷாக் விளக்கம்!
Recommended image2
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
Recommended image3
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?
Related Stories
Recommended image1
சிந்து பகுதியை மீண்டும் சேர்த்துக் கொள்வீர்களா..? இந்தியாவின் சைக்கோ மனநிலை! பாகிஸ்தான் ஆத்திரம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved