MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • இந்தியாவை மீட்கத்துடிக்கும் ஸ்டாலின்..! ‘ராஜீவ் காந்தியை கொன்றவரை கொஞ்சுவது மட்டும் நியாயமா..?’

இந்தியாவை மீட்கத்துடிக்கும் ஸ்டாலின்..! ‘ராஜீவ் காந்தியை கொன்றவரை கொஞ்சுவது மட்டும் நியாயமா..?’

மகாத்மா காந்தியின் கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றத்தில் நிரூபனம் ஆகியுள்ளது. ஆனால், ஸ்டாலின் வேண்டுமென்றே பொய் சொல்லிக் கொண்டுள்ளார். 

2 Min read
Thiraviya raj
Published : Oct 03 2025, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இந்தியாவை மீட்க வேண்டும்!
Image Credit : Asianet News

இந்தியாவை மீட்க வேண்டும்!

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்! இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி’’ எனத் தெரிவித்து இருந்தார்.

23
வேண்டுமென்றே பொய் சொல்லும் ஸ்டாலின்..?
Image Credit : our own

வேண்டுமென்றே பொய் சொல்லும் ஸ்டாலின்..?

மு.க.ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு பலரும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர். ‘‘இந்த ஆர்.எஸ்.எஸ் விஷயத்தை எதிர்க்கும் அதே வேளை, 70 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் கிடைத்தும், கொஞ்சம் கூட மக்களை அரசியல் படுத்தாமல், திராவிட மாடல்/கட்சி தலைவர்களுக்கு அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியிடுவதையும் மக்கள் கேள்வி கேட்க வேண்டும். மதத்தை வைத்து மக்களை பிரித்து, இஸ்லாமிய- கிருஸ்துவ பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துகூறி இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து கூறாமல் மதவாத அரசியல் செய்யும் திராவிட மாடல் அரசிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும்.

காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து திமுக பத்தாண்டு காலம் கொள்ளை அடித்தது மக்களுடைய வரிப்பணத்தை சுரண்டியது. தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத தலைவராக ஊழல், கொள்ளை, சட்டம்- ஒழுங்கு பிரச்சனையால் மக்களுக்கு நிம்மதி இல்லை. இவர்தான் இந்தியாவை காப்பாற்ற போகிறாரா? காந்தியின் கொலைக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றத்தில் நிரூபனம் ஆகியுள்ளது. ஆனால், ஸ்டாலின் வேண்டுமென்றே பொய் சொல்லிக் கொண்டுள்ளார்.

Related Articles

Related image1
தலைவனா அவன்..? விஜய் கொஞ்சம்கூட அறிவே இல்லாத மக்கு..! கதறடிக்கும் கரு.பழனியப்பன்..!
33
பிரதமரை கொன்றவனை வாரி அனைக்கும் கூட்டம்
Image Credit : Google

பிரதமரை கொன்றவனை வாரி அனைக்கும் கூட்டம்

திமுகவால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நம் தேசப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை கொன்றொழித்த விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்த பேரறிவாளன் போன்ற ஆயுட்கைதிகளை சிறையில் இருந்து மீட்கப் போராடி, வெளிவந்தவுடன் ஆரத்தழுவிய மு.க.ஸ்டாலின் போன்றவர்களிடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். பிரதமரை கொன்றவனை வாரி அனைத்து கொண்ட கூட்டம் நீங்கள்’’ என பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

About the Author

TR
Thiraviya raj
மு. க. ஸ்டாலின்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved