MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • கூட்டணிக்காக சதுரங்கவேட்டை.. தூள் தூளாகும் இபிஎஸின் கனவுக்கோட்டை... சிக்கித் தவிக்கும் பாஜக..!

கூட்டணிக்காக சதுரங்கவேட்டை.. தூள் தூளாகும் இபிஎஸின் கனவுக்கோட்டை... சிக்கித் தவிக்கும் பாஜக..!

கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியாக இருந்தால் என்ன தான் செய்யப்போகிறார் இபிஎஸ் என அதிமுக நிர்வாகிகளே கடும் அதிருப்தியில் உள்ளார்கள். எடப்பாடியின் பிடிவாதத்தால் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தும் நிம்மதி இல்லாமல் பாஜக அல்லாடி வருவதாகவும் கூறுகிறார்கள். 

3 Min read
Thiraviya raj
Published : Sep 26 2025, 05:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

‘‘மாமியாருக்கு மானத்து மேல ஒரு கண்... மருமவன் மேலயும் ஒரு கண்’’ என்பதைப் போலத்தான் இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் நிலைமை.

என்.டி.ஏ கூட்டணியை வலுவாக்க வேண்டும் என்பதுதான் உள்துறை அமைச்சர் அமித்ஷா -அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஒரே டார்கெட். ஆனாலும், தொடங்கிய நாளில் இருந்து ஓயாத பஞ்சாயத்துகள். ஒருங்கிணைந்த அதிமுக என முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், உட்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , சசிகலா போன்றவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். 

இன்னொரு புறம், ‘‘எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளர் பொறுப்பில் இருந்து மாற்றுங்கள். அதற்கு பிறகு கூட்டணியில் சேர்வது குறித்து யோசிக்கலாம்’’ என டிடிவி.தினகரன் என பெரிய பூட்டுப் போட்டு இருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ ஒருங்கிணைத்த அதிமுகவுக்கு வாய்ப்பே கிடையாது. அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என நெற்றியில் அடித்தாற்போல் டெல்லி வரை சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்து விட்டு வந்துள்ளார்.

24
Image Credit : ADMK

அப்படி என்றால் நாம் எப்படி வலுவான திமுக கூட்டணியை தோற்படிப்பது? அவர்கள் வலிமையான கூட்டணியாக இருக்கிறார்கள். தொடர்ந்து 4,5 தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். என்ன மாற்று வழி இருக்கிறது? நீங்களே சொல்லுங்கள்? என எடப்பாடி பழனிச்சாமிடம் கேள்வியை முன் வைத்திருக்கிறது அமித் ஷா டீம். இதையே தான் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தபோதும் கூட்டணியை வலுப்படுத்துவதற்கு என்ன வழி செய்திருக்கிறீர்கள்? எனக் குரலை உயர்த்தியேம் கேள்வியை முன் வைத்திருக்கிறார்.

சசிகலா, ஓபிஎஸ், டிடிவிினகரன் போன்றவர்கள் இல்லாமலே நமது கூட்டணியை வெற்றியாக மாற்ற வேண்டுமென்றால் அந்த பிளான் -ஏ., வை தூசி தட்ட வேண்டும். கூட்டணிக்குள் ஒற்றுமையான பாமக, தேமுதிக ஆகிய இரண்டுட்சிகளையும் கொண்டு வர வேண்டும். பாமக மூலமாக வட மாவட்டங்கள் முழுவதும் சென்ற முறையை விட அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்து விடலாம். தேமுதிக மூலமாக 234 கணிசமான தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்று நூலிழையில் வெற்றி பறிபோவதை தடுத்து நிறுத்தி விடலாம் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கக்கூடிய அஜெண்டா.

Related Articles

Related image1
மரண ட்விஸ்ட்..! டிரம்புடன் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆப்பு..! பாக் பிரதமருக்கு பலூச் படை சம்பட்டி அடி..!
34
Image Credit : Asianet News

அதை ஒட்டி தான் தேமுதிகவின் பொருளாளர் எல்.கே.சுதீஷிடம் சில முன்னாள் அமைச்சர்களும் தொடர்ந்து பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த முறை கட்டாயம் ராஜ்ய சபா சீட் கொடுப்போம். கடந்த முறை கடந்த முறையை காட்டிலும் கணிசமான தொகுதிகளை நாங்கள் இந்த முறை ஒதுக்குகிறோம். நீங்கள் வலுவாக இருக்கக்கூடிய சட்டமன்ற தொகுதிகளிலேயே உங்களுக்கு சீட்டு ஒதுக்கப்படும் என சில வாக்குறுதிகளையும் அதிமுக தரப்பில் கொடுத்து விடுவதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் தேமுதிக, திமுக பக்கம் கொஞ்சம் போக்கு காட்டி வருகிறது. அதனால் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறது எடப்பாடி டீம். இருந்த போதும் தேமுதிகவிடம் இருந்து நல்ல பதில் வரவில்லை. இந்தப் பக்கம் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பஞ்சாயத்தை தீர்த்து வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மூலமாக சில முயற்சிகளையும் எடுத்துள்ளார்கள். ஆனால் அது ஓயவே இல்லை. இன்னொரு புறம் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் உள்ள பிரச்சனையை தீர்த்து வையுங்கள். நீங்கள் பேசினால் தான் சரியாக வரும் என வட மாவட்டங்களில் இருக்கக்கூடிய சில முக்கியமான பாமக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கையும் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையொட்டியே தற்போது மறுபடியும் சில முயற்சிகளை தொடர்கிறது.

44
Image Credit : google

பாமகவும் ,தேமுதிகவும் கூட்டணியில் இருந்தால் வட மாவட்டங்களில் கணிசமான எம்எல்ஏக்களை வெல்ல முடியும், முன்பை விட இன்னமும் வாய்ப்புகள் இருக்கிறது. 10.5% இட ஒதுக்கீடு போன்ற பல விஷயங்களை முன் வைக்கலாம் என கணக்குகளை போட்டு வருகிறது எடப்பாடி பழனிசாமி தரப்பு. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த கனவு கோட்டையை தகர்ப்பது போலத்தான் இப்போதும் பாமகவில் இருந்து பரபரப்பான சம்பவங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜி.கே.மணியை சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார் அன்புமணி. 

பாமகவில் விவகாரங்கள் அதிகரித்து வருவதால் இந்த முயற்சிகளில் சோர்ந்து போய் உள்ளது எடப்பாடி பழனிச்சாமி டீம். கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியாக இருந்தால் என்ன தான் செய்யப்போகிறார் என அதிமுக நிர்வாகிகளே கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தும் நிம்மதி இல்லாமல் பாஜக அல்லாடி வருவதாகவும் கூறுகிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.

About the Author

TR
Thiraviya raj
எடப்பாடி பழனிசாமி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved