Sani Peyarchi: சனி, குருவின் வக்ர பெயர்ச்சி, படு உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்..இதில் உங்கள் ராசி இல்லையே?
Sani peyarchi 2022 Palangal: சனி மற்றும் குரு பகவான் பிற்போக்கு நிலையில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
sani peyarchi 2022
ஜோதிடத்தின் படி, தற்போது நீதியின் கடவுளான சனி அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருகிறார். குரு அதாவது தேவ குரு அறிவின் காரணி ஆவார். ஆனால் தற்போது இந்த இரண்டு கிரகங்களும் பிற்போக்கு நிலையில் நகர்கின்றன. தற்போது சனி தனது சொந்த ராசியான மகர ராசியில் பிற்போக்கு 2022 நிலையில் உள்ளார். ஒரு கிரகம் அதன் சொந்த வீட்டில் தலைகீழாக இருந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது. சனி பிற்போக்கு நிலை எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பை உண்டு பண்ணும் என்பதை பார்க்கலாம்.
sani peyarchi 2022
மிதுனம்:
இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு சகோதர சகோதரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். கணவன்-மனைவிக்கு இடையே ஏதாவது ஒரு தகராறு ஏற்படலாம். இந்த காலத்தில் மன உளைச்சலையும் உணர்வீர்கள். இந்த காலத்தில் அனைவருடன் பேசும்போதும் மிகவும் நிதானத்துடன் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
sani peyarchi 2022
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சவாலாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பல அனுகூலமற்ற சம்பவங்கள் ஏற்படலாம். நீங்கள் எதிர்பாராத சில தொந்தரவுகள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சிலும், பயன்படுத்தும் வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது.
sani peyarchi 2022
மீனம்:
மீன ராசிக்காரர்கள் 3 மாதங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும். இந்த காலத்தில் நீங்கள் அதிகமாக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதன் விளைவு நிதி நிலைமையில் காணப்படும். இந்த நிலை சகோதரனுடனான உங்கள் உறவைக் கெடுக்கும். தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும்.