- Home
- Lifestyle
- Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சியால் அன்னை லட்சுமி தேவியின் அருள் மழையில் நனையும் 3 ராசிகள்..!
Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சியால் அன்னை லட்சுமி தேவியின் அருள் மழையில் நனையும் 3 ராசிகள்..!
Sukran Peyarchi Palangal 2022: சுக்சிரனின் ராசி மாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு அளவில்லாத சிறப்பு பலன்களை தரப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

Sun and Venus Transit
சுக்கிரன் கிரகம் ஆடம்பர வாழ்கை, செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் வளமை ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அவருக்கு லட்சுமி தேவியின் சிறப்புப் அருள் கிடைக்கும். எனினும், சுக்கிரன் சாதகமான நிலையில் இல்லாவிட்டால், அந்த நபர் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
Sun and Venus Transit
அதன்படி, வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியில் நுழையவுள்ளார். சுக்சிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்கள் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். அவைகள் எந்த ராசிகள் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sun and Venus Transit
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு பலவித சுப பலன்கள் கிடைக்கும். அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும்.இந்த நேரத்தில், வேலையில் உங்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவுகள் உருவாகும். குடும்பத்தில் திருமணம், ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறலாம். ஆனால் இந்த நேரத்தில் பண பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்கவும். இல்லையெனில், பொருள் இழப்பும் ஏற்படலாம்.
Sun and Venus Transit
கடகம்:
சுக்கிரனின் ராசி மாற்றத்தினால், கடக ராசிக்காரர்களுக்கு வாழ்வில் வெற்றிகிடைக்கும். இந்த காலத்தில் வருமானம் அதிகரிக்கும். இதன் காரணமாக பண பிரச்சனைகள் தீரும். உங்கள் மனைவியுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவார்கள். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீட்டால், எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Sun and Venus Transit
மகரம்:
இந்த நேரத்தில் கைக்கு வராமல் தடைப்பட்டிருந்த பணத்தைப் பெறலாம். வியாபாரம் விரிவடையும். அதே நேரத்தில், பணியிடத்தில் உங்களின் திறன் மூலம் ஒவ்வொரு பணியையும் சிறப்பாக முடித்து பாராட்டினை பெறுவீர்கள். மேலும், இந்த நேரத்தில் உங்கள் சக ஊழியர்களும் மேலதிகாரிகளும் உங்கள் பணியினால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.