MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய '1' பழக்கம்; பல பெற்றோருக்கு தெரியாத தகவல்!!

குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய '1' பழக்கம்; பல பெற்றோருக்கு தெரியாத தகவல்!!

குழந்தைகளிடம் எமோஷனல் இண்டெலிஜன்ஸ் வளர பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? ஏன் அது முக்கியம் என இந்தப் பதிவில் காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jun 21 2025, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Parenting Tips
Image Credit : pinterest

Parenting Tips

உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாளக் கூடிய திறனை எமோசனல் இண்டெலிஜென்ஸ் எனலாம். இந்த விஷயம் குழந்தைகளிடம் இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் உயர் பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் சுய விழிப்புணர்வு, சுய கட்டுப்பாடு, சரியான முடிவெடுத்தல் என எமோசனல் இண்டெலிஜென்ஸ் பல விஷயங்களை உள்ளடக்கியது. குழந்தைகளிடம் எமோஷனல் இண்டெலிஜன்ஸ் வளர பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? ஏன் அது முக்கியம் என இந்தப் பதிவில் காணலாம்.

25
உரையாடல்கள்
Image Credit : unsplash

உரையாடல்கள்

குடும்ப உரையாடல்கள் குழந்தைகளுடைய ஆளுமையில் பெரும் பங்காற்றுகின்றன. எமோஷனல் இன்டெலிஜென்ஸ் உள்ள குழந்தைகள் விரைவில் துன்பங்களிலிருந்து மீண்டு வரும் திறன் பெற்று இருக்கிறார்கள். இது பிறவியில் கிடைக்கும் சக்தி அல்ல. அனுபவங்களின் வழியே பெறக்கூடியதுதான். குடும்பத்தில் உள்ள பிணைப்பும், உரையாடல்களும் குழந்தைகளுக்கு இத்திறனை வளர்க்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. பெற்றோரின் அனுபவங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கும் உதவக்கூடியவை.

மன அழுத்தம்

குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும், உணர்ச்சிகளை கையாளவும் பெற்றோர், குழந்தை உரையாடல் அவசியம். தினமும் குழந்தைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும். அவர்களுடைய உணர்வுகளையும் வாழ்க்கையே அவர்கள் அணுகும் விதத்தையும் தெரிந்து கொண்டு அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.

Related Articles

Related image1
Parenting Tips : குழந்தைகளை மகிழ்ச்சியாக வைக்க இந்த 3 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்!
Related image2
குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு பெற்றோர் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
35
உளவியல் கட்டமைப்பு
Image Credit : unsplash

உளவியல் கட்டமைப்பு

பெற்றோர் தங்களுடைய குழந்தைகளின் உணர்ச்சி அனுபவங்களை அங்கீகரித்து உரையாடும்போது அவர்களுடைய எமோஷனல் இன்டலிஜென்ஸ் மற்றும் மீள் தன்மையை மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள். ஒருவேளை பெற்றோர் குழந்தைகளுடைய உணர்ச்சி வெளிப்பாட்டை புரிந்து கொள்ளாமல் நிராகரிக்கும்போது அதாவது உரையாடலை தவிர்க்கும் போது குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை அடக்குகிறார்கள். இந்த செயல், பிறரிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடாது என்று மறைமுகமாக குழந்தைகளுக்கு பெற்றோர் உணர்த்துவதாக அமைகிறது.

45
பதிலளித்தல்
Image Credit : unsplash

பதிலளித்தல்

குழந்தைகள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போதும், ஏதேனும் கேள்விகளை முன் வைக்கும் போதும் அதற்கு அன்புடன் ஆதரவாக பெற்றோர் பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து குழந்தைகளை அதிகமாக கட்டுப்படுத்த நினைக்கும் போது அவர்களுடைய உணர்ச்சிகள் நிலையற்ற தன்மைக்கு மாறிவிடும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகளிடம் ஆழமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். பெற்றோரின் அனுபவங்களை, குடும்பக் கதைகளை கேட்டு வளரும் குழந்தைகள் உணர்ச்சிகளை சிறப்பாக கையாளும் திறனை பெற்றுள்ளார்கள்.

கதைகள் உணர்ச்சிபூர்வமாக செயல்படக் கூடிய கருவிகள். இவை மனதில் நங்கூரங்களாக பதிந்து ஆழமான புரிதலை உருவாக்குகின்றன. இன்றைய இளம்தலைமுறையினர் பார்ப்பதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக தெரிந்தாலும் முந்தைய தலைமுறையை விட அதிகமாக உள்வாங்கிக் கொள்ளும் தன்மையுடையவர்கள். தங்களுடைய குடும்பக்கதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து அதில் அர்த்தம் தேடும் பண்புடையவர்கள்.

55
பெற்றோர் செய்ய வேண்டியது;
Image Credit : unsplash

பெற்றோர் செய்ய வேண்டியது;

சுய விழிப்புணர்வு, பச்சாதாபம், சுய கட்டுப்பாடு போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்கு மனம் திறந்த உரையாடல்கள் அவசியம். குறிப்பாக பெற்றோர்கள் தங்களுடைய சொந்த உணர்ச்சிகளை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதை பார்த்து தான் குழந்தைகள் வளர்வார்கள். அதனால் ஒரு நல்ல மாதிரியாக பெற்றோர் இருக்க வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பெற்றோர் ஆலோசனை
வாழ்க்கை முறை
பெற்றோர் குழந்தை உறவுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Related Stories
Recommended image1
Parenting Tips : குழந்தைகளை மகிழ்ச்சியாக வைக்க இந்த 3 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்!
Recommended image2
குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்கு பெற்றோர் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved