MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மார்ச் 08 முக்கிய நிகழ்வுகள்!! நாளை எங்கு பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை கொடுக்குறாங்க?

மார்ச் 08 முக்கிய நிகழ்வுகள்!! நாளை எங்கு பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை கொடுக்குறாங்க?

மார்ச் 08ஆம் தேதி நடைபெறவுள்ள முக்கிய தினங்கள் குறித்து இங்கே காணலாம்.  முழுவிவரங்கள் உள்ளே!!  

2 Min read
Kalai Selvi
Published : Mar 07 2025, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

March 08 Important Events : ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்கள் செய்து வரும் சாதனைகளை நினைவுகூரும் வகையில் அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். மார்ச் 08ஆம் தேதி நிகழ இருக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்தப் பதிவில் காணலாம்.  

25
பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு;

பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு;

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி குஜராத் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது பெண்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 2,300க்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார். 

இதையும் படிங்க:  உடனடியாக களத்தில் இறங்கிய ஸ்டாலின்.! மாநில முதல்வர்களுக்கு பறந்த முக்கிய கடிதம்- உறுதியான தேதி

35
பிங்க் ஆட்டோ- தொடங்கி வைக்கும் முதல்வர்

பிங்க் ஆட்டோ- தொடங்கி வைக்கும் முதல்வர்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிங்க் ஆட்டோ திட்டம் செயல்பட தொடங்குகிறது. சென்னையில் பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.   பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்கும் வகையில் சுயதொழில் வேலைவாய்ப்பாக இத்திட்டம் மார்ச் 8இல் தொடங்குகிறது. இத்திட்டத்தை நாளை (மார்ச் 8) முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைப்பார் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க:  ஆட்டோவில் பயணமா.! இனி பயமே வேண்டாம்- தமிழக அரசின் சூப்பரான திட்டம் அறிமுகம்

45
உதவித்தொகை:

உதவித்தொகை:

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 8ஆம் தேதி முதல் தகுதியான பெண்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 உதவித்தொகை அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார். டெல்லி பெண்களுக்கு மார்ச் 8 ஆம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.  

55
குறை தீர்ப்பு முகாம்:

குறை தீர்ப்பு முகாம்:

ரேஷன் கார்டுகளில் தகவல்கள் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக குறை தீர்ப்பு முகாம்கள் மாதம்தோறும் 2ஆவது சனிக் கிழமைகளில் நடத்தப்படும். இம்மாத முகாம் மார்ச் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு அரசு
பிங்க் ஆட்டோ

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved