Face beauty tips: வெறும் 10 ரூபாய் செலவில்..உங்களை இளவரசியாக மாற்றும் ரோஜா பூ பேஷியல்..எப்படி தயார் செய்வது..?
Face beauty tips tamil: வெறும் 10 ரூபாய் செலவில் இயற்கை வழியில், நாம் பேரழகியாக மாறுவதற்கு வீட்டிலேயே சூப்பரான ஒரு ரோஜா பூ க்ரீமை தயார் செய்து பயன்படுத்தலாம். அதன் செய்முறை விளக்கத்தை பற்றி தான் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.
இந்த உலகில் அழகை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கிறார்கள்..கறுப்பாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும், நெட்டையாக இருந்தாலும், குட்டையாக இருந்தாலும் சரி, அழகு என்பது ரசிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே நாம் அத்தகைய அழகினை மெருகேற்றி கொள்வதற்கு பியூட்டி பார்லர் சென்று விதவிதமான அலங்காரங்களை செய்து வருகிறோம். மேலும், ஏராளமான விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த கீரீம் வகைகளை பயன்படுத்துகிறோம். இதனால் உங்களின் பணம் செலவு ஆவதுடன்,ஏராளமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
எனவே, வெறும் 10 ரூபாய் செலவில் இயற்கை வழியில், நாம் பேரழகியாக மாறுவதற்கு வீட்டிலேயே சூப்பரான ஒரு ரோஜா பூ க்ரீமை தயார் செய்து பயன்படுத்தலாம். அதன் செய்முறை விளக்கத்தை பற்றி தான் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் ரோஜா - 1 கப்
கடலை மாவு – 2 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் 1/4 கப்
செய்முறை விளக்கம்:
பன்னீர் ரோஜா கடைகளில் வாங்கி கொள்ளுங்கள். பின்னர், ரோஜா இதழ்களை வெயிலில் காயவைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்து இதை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
வடிகட்டிய இந்த லிக்விட் உடன் கடலை மாவு, ரோஜா இதழ் பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்தால், ரோஜா இதழ் ஃபேஸ்பேக் தயார்..!
இந்த கிரீமை நீங்கள் இரவு தூங்க செல்லும் போது முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். வாரம் இரண்டு முறை, இந்த கிரீமை நீங்கள் பயன்படுத்தினால், போதும் உங்களுடைய முகத்தில் ஒரு புது பொலிவு உண்டாகும். முகம் பளபளப்பாக மாறும்.