MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kadaai Paneer : வடநாட்டு ஸ்டைலில் ருசியான ''கடாய் பன்னீர் கிரேவி''

Kadaai Paneer : வடநாட்டு ஸ்டைலில் ருசியான ''கடாய் பன்னீர் கிரேவி''

வாங்க, கடாய் பன்னீரை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம். 

2 Min read
Author : Dinesh TG
Published : Sep 12 2022, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Kadai panner

Kadai panner

குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. இவற்றில் தான் கால்சியம் ஊட்டச்சத்து அதிகம் காணப்படுகிறது. அதிலும் குழந்தைகள் பால் பொருட்களாத பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்தி, தோசை இட்டி போன்றவையுடன் கொடுத்தால் விரும்பி தொல்லை செய்யாமல் சாப்பிடுவார்கள்.

வாங்க, கடாய் பன்னீரை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

23
Kadai panner

Kadai panner

தேவையான பொருட்கள்

200 கிராம் பண்ணீர்

ஒரு வெங்காயம் (நறுக்கியது)

இரு தக்காளி (நறுக்கியது)

ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்

ஒரு ஸ்பூன் மல்லித்தூள்

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையான அளவு உப்பு

தாளிக்க தேவைப்படும் பொருட்கள்

3 ஸ்பூன் எண்ணெய்

ஒரு ஸ்பூன் சோம்பு

4 கிராம்பு

ஒரு பட்டை

4 பல் பூண்டு

ஒரு பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)

33
Kadai panner

Kadai panner

செய்முறை

முதலில், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பன்னீரை சிறுசிறு துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், தாளிப்பதற்கு தேவையான பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர், அதில் வெங்காயத்தைப் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, பின் தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு, அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பை தூவி சிறிது நேரம் கிளறி விட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனித்தனியாக பிரியும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

Chappathi With Kuruma : சப்பாத்திக்கு ஒரு புதுவித சைட் டிஸ் ''காலிப்ளவர் பட்டாணி குருமா''!

இறுதியாக அதில் நறுக்கி வைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, இரண்டு நிமிடம் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால் ருசியான கடாய் பன்னீர் ரெடி!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved