- Home
- Lifestyle
- Idli Batter Tips: இட்லி மென்மையாகவும், தோசை மொறுமொறுப்பாகவும் வரணுமா? ஹோட்டல் சீக்ரெட் இதுதான்!
Idli Batter Tips: இட்லி மென்மையாகவும், தோசை மொறுமொறுப்பாகவும் வரணுமா? ஹோட்டல் சீக்ரெட் இதுதான்!
இட்ல பஞ்சு பாஞ்சாகவும், தோசை முருகலாகவும் வரணுமா?! இந்த ஒரு ரகசியத்தை செஞ்சாலே போதும். அது குஷ்பூ இட்லியை உங்களுக்கு கொடுக்கும். தோசையும் சரணபவன் தோசை போல செம்மையாக இருக்கும். ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்.!
15

Image Credit : Getty
மாவு பதம் ரொம்ப முக்கியம் மக்களே.!
பொதுவா, இட்லி, தோசை மாவை அரைச்சதும், இரவு முழுக்க புளிக்க விடுவோம். அப்போதான் இட்லி, தோசை சாஃப்ட்டா, ருசியா வரும். குறிப்பா, இட்லி மாவு புளிக்கலைன்னா இட்லி கல்லு மாதிரி ஆகிடும். நல்லா புளிச்சிருந்தா, பஞ்சு மாதிரி சாஃப்ட்டா இருக்கும். அதேபோல, தோசை மாவு நல்லா புளிச்சாதான் தோசை மொறுமொறுன்னு வரும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
25
Image Credit : Gemini AI
மாவில் சேர்க்கவே கூடாத பொருள் சமையல் சோடா.!
சில சமயம், நமக்கு நேரம் இல்லாதப்போ மாவு சீக்கிரம் புளிக்கிறதுக்காக சமையல் சோடாவை சேர்ப்போம். ஹோட்டல்களிலும் இதைத்தான் செய்றாங்க. இது மாவை சீக்கிரம் புளிக்க வைக்கும்னு சிலர் நம்புறாங்க. ஆனா, இப்படி சோடா சேர்ப்பது உடல்நலத்திற்கு கேடுன்னு மருத்துவர்கள் எச்சரிக்கிறாங்க. இது வயிறு சம்பந்தமான நோய்களை உண்டாக்கலாம்.
35
Image Credit : Getty
இது வேண்டவே வேண்டாம்
சமையல் சோடாவில் கால்சியம் கார்பனேட் மற்றும் பிற அமிலங்கள் உருவாகின்றன. இவை குடல் நோய்களுக்கு வழிவகுக்கும். இட்லி மாவில் சமையல் சோடா சேர்த்தால், சில மணி நேரங்களில் மாவு புளித்துவிடும். ஆனால், அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களால் குடலில் புண்கள் போன்ற நோய்கள் கூட ஏற்படலாம்.
45
Image Credit : Pinterest
இதுதான் நல்ல தீர்வு.! முயற்சி செய்து பாருங்கள்.!
இதற்கு தீர்வே இல்லையான்னு நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கு. ஆனா, இட்லி-தோசை மாவுல கொஞ்சம் புளித்த மோர் சேர்த்தா, அது இயற்கையாகவே புளித்துவிடும்னு நிபுணர்கள் சொல்றாங்க. மாவு புளிக்க ஈ-கோலை (E-coli) போன்ற நல்ல பாக்டீரியாக்கள் தேவை. இதனால்தான் இட்லி, தோசையை 'ப்ரோபயாடிக்' உணவுகள்னு சொல்றோம்.
55
Image Credit : Pixabay
இயற்கையா புளித்த மாவு செய்யும் அந்த அதிசயத்தை.!
ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் சமையல் சோடா, ஃப்ரூட் சால்ட் சேர்த்து மாவை செயற்கையாக புளிக்க வைக்கிறாங்க. ஆனா, இப்படி செய்யும்போது இட்லியின் சுவையும் மாறிடும். இயற்கையா புளித்த மாவுல செய்யுற இட்லி, தோசைதான் ருசியா இருக்கும். மாவு புளிக்க ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை தேவை. இதற்காக, தரமான ஹோட்டல்கள் 'இன்குபேட்டர்களை' (incubators) பயன்படுத்துகின்றன.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

